Blogger news

இன்றைய குறள்

பழமொழி

Blogger templates

Thursday, August 18, 2011

பரிமாற்றம்.......





அன்பின் வெளிப்பாடு,

பாசத்தின் பகிர்வு,

நேசத்தின் நெகிழ்வு,

முத்தம்...



மனைவியை பிரியும்

பொழுது,

உன்னை பிரிந்தாலும்

நெஞ்சில் என்றும்

உன் நினைவு தான்

என்று உணர்த்தும்.



கணவனுக்கு காலையில்

கொடுப்பது, இந்த நாள்,

இதே போல் இனிமையாக

அமையட்டும்

என்று உணர்த்தும்.



காதலர்கள் பரிமாறும்

முத்தம் அன்பின்

ஆழத்தை

ஒருவருக்கொருவர்

பரிமாறுவது.



அன்னையிடம் பாசத்தையும்

தந்தையிடம் நேசத்தையும்

சகோதர சகோதரியிடம்

பரிவையும் வெளிக்கொணரும்.



முதுமை முத்தம்

வாழ்ந்து சாதித்ததை

வெளிப்படுத்தும்.



மழலை முத்தம்

கபடம் அறியா

முத்தம்.



முயற்சி செய்யுங்கள். அன்பை பரிமாறுங்கள்.

0 comments:

Post a Comment