படம்: உன் கண்ணில் நீர் வழிந்தால்
பாடியவர்: ஜேசுதாஸ்
ஆண் : என்ன தேசமோ
இது என்ன தேசமோ
இங்கு பொய்கள் கூடியே
ஒரு நியாயம் பேசுமோ
தர்மம் தூங்கிப் போகுமோ
நீதி வெல்லுமோ
இங்கு வேதமாகுமோ
என்ன தேசமோ
இது என்ன தேசமோ
ஆண் : இன்ப துன்பம் என்பது
இரவு பகலைப் போன்றது
காலம் நாளை மாறலாம்
காயம் எல்லாம் ஆறலாம்
காலம் நாளை மாறலாம்
காயம் எல்லாம் ஆறலாம்
சோகமென்ன தோழனே
சூழ்ச்சி வெல்வாய் வீரனே
எதிர்த்து நின்று போரிடு
இன்று ஓய்வெடு
நீ இன்று ஓய்வெடு
என்ன தேசமோ
இது என்ன தேசமோ
ஆண் : பிறக்கும் போதும் பேரில்லை
இறக்கும் போதும் பேரில்லை
இடையில் தானே குழப்பங்கள்
வாழ்க்கையோடு வழக்குகள்
இடையில் தானே குழப்பங்கள்
வாழ்க்கையோடு வழக்குகள்
ஜெயிக்கபோகும் மானிடா
மயக்கம் இங்கே ஏனடா
உறுதியோடு கேளடா
உண்மை நீயடா
ஓ... உண்மை நீயடா
என்ன தேசமோ
இது என்ன தேசமோ
இங்கு பொய்கள் கூடியே
ஒரு நியாயம் பேசுமோ
தர்மம் தூங்கிப் போகுமோ
நீதி வெல்லுமோ
இங்கு வேதமாகுமோ
1 comments:
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று
Post a Comment