Blogger news

இன்றைய குறள்

பழமொழி

Blogger templates

Tuesday, August 9, 2011

உடன்பிறப்பே........

என் நண்பரின் மனக்குமுறல்..........



உன்னை என்னவென்று சொல்வது!

உனக்கு பின்னே என்னை சுமந்தாள் நம் தாய்.



அன்னை அருகில் தொட்டிலில்

நான் தவழும் பொழுது,

தம்பி பாப்பா

என்று சொல்லி என்னை

தொட்டு தொட்டு பார்ப்பாய்

என்று அன்னை சொன்ன ஞாபகம்



அண்ணன் தம்பி என்ற அழகான உறவாக தான்

வளர்ந்தோம்.

விட்டுக்கொடுத்து தான் இருந்தது நம்

விடலைப் பருவம்.



நீ காக்கை கடிகடித்து கொடுத்த

தேங்காய் பர்பி,

திண்ணையில் விளையாடும்

திருடன் போலீஸ்,

தெருவில் இருக்கும் நண்பர்களோடு

உப்புமூட்டை ரேஸ்,

தென்னன்பிஞ்சில் விளையாடிய

கிரிக்கெட், இந்த நினைவுகள் எல்லாம்

மீண்டும்

என்னை பள்ளிப் பருவத்திற்கு

அழைத்து செல்கிறது.



இளமைப் பருவத்தில் எனக்கும் காதல்

நோய் வந்தது.

நான்

அடிபட்டு மருத்துவமனையில்

படுத்திருக்கும்

பொழுது இயற்கை உபாதைகளுக்கு

கூட

நீ தான் உதவினாய்.



காதல் திருமணம், என் காதலியின்

ஜாதகத்தால் உனக்கு அபாயம்

என்ற பொழுதும் எதிர்ப்புகளை

சமாளிக்க நீ உதவினாயே..

ஆனால்

உன் ஒரு சொல்லுக்கு

உன்னை எதிர்தேனே?



எனக்கு குழந்தை பிறந்ததை கேள்விப்பட்டு

நீ

அனுப்பிய வாழ்த்து செய்தியையும்

நிராகரித்தேன், கோபத்தில்.

வேலை தேடி வெளிநாடு வந்திருந்த

பொழுது நீ அடிப்பட்ட செய்தி கேட்டேன்.

நீ எனக்கு செய்ததை நான் உனக்கு

செய்ய இயலாமல் எனக்குள்ளே

குமுறினேன்.



ஒன்றரை ஆண்டுகள் உன்னிடம் பேசாமல்

இருந்த நான்

நீ

காயமுற்றிருக்கும் பொழுதும் தொடர்ந்தேன்.

பெரும் காயத்தால் சுயநினைவின்றி

நீ

இருந்த பொழுது, உன்னை காணாத

கண்கள்,

நினைவு வந்த பொழுது உன்னிடம்

பேசாத என் இதழ்கள்,

உன் பேச்சை கேட்காத செவிகள்,

இப்பொழுது உன்னை பற்றியே,

நீ மரணித்த பொழுது!

இளவலாக இல்லை ஒரு

மகனாய் இன்று மனதிளுள்ளே

அழுகிறேன்.



ஜென்மம் அடுத்து இருந்தால்

உனக்கு நான் பிள்ளையாக பிறக்க ஆசைப்படுகிறேன்

4 comments:

நெஞ்சை நெகிழவைத்த வரிகள்....

நண்பர் ஒருவரின் உடன்பிறப்பு உயிர் நீத்தார். அவர் என்னுடன் அவரின் சோகத்தை பகிர்ந்து கொண்டார். அது என்னை மிகவும் பாதித்துவிட்டது. அதன் பிரதிபலிப்பு தான்.

சகோதரனின் பிரிவின் வேதனையை அப்பட்டமாக கண் முன் கொண்டு வந்துள்ளீர்கள். அருமையான கவிதை !

நன்றி தோழி யாழினி அவர்களே.......

Post a Comment