Blogger news

இன்றைய குறள்

பழமொழி

Blogger templates

Tuesday, November 29, 2011

என்னை கவர்ந்த அன்பு தம்பியே..

அன்பு தம்பி,

உடல் நிலையில் சிறு பிரச்சனை
என்று கூறினாய்.
காலில் உள்ள ரணம் சீக்கிரம்
குணமாகிவிடும் என்று கூறினாய்.
ஆனால் இத்தனை நாட்களா?

எல்லா நட்பையும் உதறினாய்.
அந்த வட்டத்தினுள் என்னையும்
இணைத்துவிட்டாயோ??

நிறைய யுத்திகள் கொடுத்து
என்னை சிந்தித்து
பதிவு செய்ய வைத்த தம்பி,
எங்கேயடா மறைந்திருக்கிறாய்?

நாம் செய்த கலந்துரையாடல்கள்
இன்னமும் என் இதயக்கூட்டில் பத்திரமாக
இருக்கிறது.
அதை நீ மறந்துவிட்டாயோ?
அல்லது ஒளிந்துகொண்டாயா??

மனநிறைவோடு முகமலர்ச்சியோடு
அண்ணா அண்ணா என்று
அழைப்பாயே,
என் ஈழத்து இளம்புலியே
எங்கேயடா சென்றாய்.

ஒரு வேலை இதை நீ காண
நேர்ந்தால் ஒரு
மின்னஞ்சலாவது அனுப்புவாய்
என்று நம்பிக்கையுடன் பதிக்கிறேன்.

0 comments:

Post a Comment