"Its really hard to live without mother". எனக்கு வருத்தமளித்தது.
அதன் வெளிப்பாடு இது!!!!
அன்பு அம்மா,
கண்ணின் இமைபோல்
என்னை காத்தவளே,
நீயில்லாத என் வானம்
நிலவில்லாத அமாவாசை தான்!!
சோதனைகள் பலவந்தும்
என்னை காத்தவளே,
நீ இல்லாத வாழ்க்கை
எனக்கு சோதனையாச்சே!!
என் கரம் பற்றியே
எங்கும் செல்பவளே,
இன்று என்னை
மட்டும் தவிக்கவிட்டாயே!!
அருகில் நீ இருக்கும்
பொழுது புரிந்துகொள்ளவில்லை,
நீ இல்லாத பொழுது
வாழ்க்கையே புரிந்தது!!
என்னை ஈன்றவளே,
உன் நிழலினும்
பாதுகாப்பு வேறில்லை.
4 comments:
its really nice of u na...tq na:)
Simply superb... really nice...
superb lah
நன்றி....தர்ஷினி, பிரேம், பெயர் தெரியாதவர்....
Post a Comment