Blogger news

இன்றைய குறள்

பழமொழி

Blogger templates

Friday, November 25, 2011

கனவு மெய் பட வேண்டும்




உள்ளம் குமுருதே, வலியிருக்குதே
நெஞ்சில் தைத்த ரணங்களில்
குருதி வடியுதே.

பதபதைக்குதே, பழி தீர்க்க துடிக்குதே
என் பள்ளிகளின் சுவடு
அழிந்ததே.

மனம் துடிக்குதே, உள்ளம் அழுகுதே
மருத்துவமனையின் மண்ணில்
இரத்தம் தோய்ந்ததே.

பாதை மறைந்ததே, இதயம் கிழீந்ததே
பயின்ற பாசறைகள்
பாழடைந்து போனதே.

குற்றம் பெருகுதே, குழந்தை கதருதே
பெண்களின் கருவும்
கலைக்கப்படுதே.

உடல் சிதைந்ததே, உயிர்கள் பிரிந்ததே
உறவுகள் கண்முன்னே
கலங்கிபோனதே

ஆறாத வடுக்களே, ஆடிய விழுதுகளே
நீரோடும் ஆற்றில் குருதி
கலந்ததே.

கரம் இணையுதே, வலு கூடுதே
தமிழ் மனம் எங்கும்
வீசுதே.

துவண்ட உறவுகளே, ஒளி பிறக்குதே
தமிழீழ தாகம் எங்கும்
பரவுதே.

நெஞ்சு நிமிருதே, உரக்க ஒலிக்குதே
புலிக்கொடி பாரில்
பட்டோளிவீசுதே.

கனவு பலித்ததே, காற்று வீசுதே
சுதந்திர பூமியில் கால்
பதிந்ததே.

0 comments:

Post a Comment