என் முகமரிந்த சகோதரியே,
இணையதள அரட்டையில் சந்தித்தோம்.
நண்பா என்று அழைத்து,
எனக்கில்லை அண்ணன்,
உங்களை அண்ணா என்று
அழைக்கவா என்ற கேள்வி உங்களிடமிருந்து.
சரி இருக்கும் நிறைய சகோதரிகளோடு
நீங்களும் ஒருவர் என்று நினைத்து
பழகினேன்.
நான் தெளிவற்ற நிலையில் இருக்கும் பொழுது
எனக்கு புது சிந்தனைகளை கொடுத்தீர்கள்.
என் பதிப்புக்களை படித்ததோடு
மட்டுமில்லாமல்,
விமர்சனம் செய்து
கருத்துக்கள் கூறி
ஊக்கமும் கொடுத்தீர்கள்.
சகோதரிகள் பலர் என்னிடம் அறிவுரை
கேட்டிருந்த பொழுது,
எனக்கு அறிவுரை கூறி தனித்திருந்தீர்கள்.
பல மாதங்கள் தொடர்பற்று போனது.
மினஞ்சல்களுக்கும் பதிலில்லை.
இன்று திடிரென்று சுவாசிக்க சிரமப்பட்டேன்,
என் வலது மார்பு வலியினால்.
அதை விட மாலை அதிக வலி
உங்களுக்கு சுகவீனம் கேள்விப்பட்டபொழுது.
ஒரு வேலை இது தான் மிகுந்த பாசமோ!
நெஞ்சம் பதபதைதுப்போனது.
துக்கப்பட்டேன்.
இடிந்துபோனேன்.
கண்களும் மெல்லியதாக கலங்கித்தான் போனது.
பேச வார்த்தையில்லாமல் சிறிய மௌனம்.
உங்கள் மனவலிமை,
உங்களை குணப்படுத்தி,
அதே
பழைய பொலிவுடன்,
மனஉறுதியுடனும்,
சிறப்பாக திரும்ப
சேர்க்கும் என்ற நம்பிக்கையுடன்
உங்கள் முகமறியா
அன்பு அண்ணன்
0 comments:
Post a Comment