Blogger news

இன்றைய குறள்

பழமொழி

Blogger templates

Monday, November 7, 2011

திக்கு தெரியாத கடலில் திசை தேடும் துடுப்புகள்


துடுப்புகள் துழையவே, எங்கள் தோனியின் ஓட்டமே,
அலைகளின் நடுவிலே, இது என்ன வெற்றியா? தோல்வியா?
உப்பு நீரிலும்; ஊதக்காற்றில்லும்
அல்லல்படுகிறோம்; இது விதியோ சாபமோ?

கடல் அன்னையை தீண்டும்போதும், கைகூப்பும் எங்கள் கைகள்
ஒருமுறை கரையை மீண்டும் திரும்பி பார்க்க வைக்கிறது.
குடும்பத்தினரை பார்த்துவிட்டு, விழியோரம் நீர் தெளித்து
அந்த சோக கண்களை காண்போமா? என்று உள்ளம் கேட்கிறது

அமைதியான வாழ்க்கைக்காக, இரைச்சலான கடலில்
வாழ்க்கையின் ஆதாரத்தை தேடுகிறோம்
வலையை கடலில் வீசினாலும், எங்கள் குழந்தைகளின்
நாட்டம் நட்ச்சத்திர மீன்கள் மீது தான்.
கவுச்சி வாடை எங்கள் மேல் வீசினாலும்
எங்கள் மனம் கலங்கப்பட்டதில்லை

புயலில் அல்லல்படுவது எங்களுக்கு
பழகி தான் போனது.
சில சமயங்களில் ஆழிப்பேரலை
எங்களை சுழற்றி போடுகிறது.
பணி சென்ற துணைவர் திரும்பிவர
எங்கள் பெண்களின் வேண்டுதல்,
தந்தையின் வரவுக்காக வாடியிருக்கும்
பிள்ளைகளின் சோக கண்கள்,
மனதிலேயே நிற்கும்.

வலைகளுக்கும் கட்டுப்பாடு உண்டு சில காலங்களில்.
விதிகளை மீறாமல் எடுத்து செல்வோம்.
மீன் வளப்பகுதியை தேடிசென்று வீசுவோம்.
வலைகளை உலர்த்த ஒப்பந்தம் கச்சத்தீவில்.
வாக்குறுதியை மீறி வலையருக்கும்
அண்டை நாட்டு இராணுவம்,
இப்பொழுது எங்கள் எல்லையினுள்ளே
எங்களை தாக்குகிறது.

உப்புக்காற்றிலும் உடல்வலியை பொருத்து
வலையிழுக்கும் எங்களை
கடலிலே கழுதருக்கிறது,
சுட்டு வீழ்த்துகிறது.
அஞ்சியவர்கள் மீன்களை கொடுக்கிறோம்
எதிர்ப்பவர்கள் தங்களை தொலைக்கிறனர்

குட்ட குட்ட குனிந்தோம்,
அடிக்க அடிக்க அஞ்சினோம்,
உழைப்பை வீனடித்தோம்,
உயிரை மாய்த்தோம்.
உயிர் வாழ, குடும்பத்தை காக்க
பல்லுக்கு பல்
கண்ணுக்கு கண் என
மனதில் உறுதிகொண்டு,
நாளைய பொழுதின்
விடியலை பார்த்திட,
ஆயுதம் ஏந்தினோம்.
நாங்களும் வாழவேண்டும் அல்லவா!

திக்கு தெரியாத கடலில் திசை தேடும் துடுப்புகள் நாங்கள் தமிழக மீனவர்கள்

3 comments:

அருமையான பதிவு, மிக்க நன்றி தோழரே

இந்த கரு கொடுத்தது நீங்கள் தான் உங்களுக்கு தான் முதல் நன்றி...

Post a Comment