
கடல் அன்னையே,
எங்கள் வாழ்க்கைக்கு தேவையான
உணவு பொருள்களை
வாரி தரும் வள்ளல் நீ.
கோபப்படும் வேளையில்
புயலாகவும், ஆழிப்பேரலையாகவும்
அவ்வப்பொழுது எங்களை
சோதித்து செல்கிறாய்.
நாங்கள் செய்கின்ற
பூஜைகள் கோபத்தை தணிக்கும்
என்ற நம்பிக்கையில்
இயன்றவற்றை செய்கின்றோம்.
நாங்கள் உன்னுள் நுழையும் பொழுது
திரும்பி வருவோம் என்ற நம்பிக்கையில்
எங்கள் குடும்பம். ஆனால்
எங்கள் சடலங்கள் உன்னுள்ளே
அடக்கமாகின்றன.
சிங்கள காடையர்கள் குலைக்கின்றனர்
எங்கள் நம்பிக்கையை.
நிலத்தில் புதையாமல்
தண்ணீரில் புதைந்து போகிறோம்.
காப்பாற்ற யாருமில்லை,
உன்னை நம்பி உள்ளே வந்தோம்,
சடலமாகி திரும்புகிறோம்.
இனி காந்திய வழி வேண்டாம் எங்களுக்கு,
குட்ட குட்ட குனிந்து சென்றது போதும்,
வேறு வழியில்லை என்ற எண்ணத்தில்
நிமிர்கிறோம்,
எங்கள் பிள்ளைகளாவது பிழைக்கட்டுமே!
பிரபாகரனின் உறவினர்கள்
என்று தாக்குத்தல்,
எங்கள் தம்பி பிரபாகரனின்
வழியில் நாங்களும்
ஆயுதம் ஏந்த
எண்ணுகிறோம்.
இனி
துடுப்போடு எங்களிடம்
துப்பாக்கியும் இருக்கும்.
நாங்கள் ஜலசமாதியானது போதும்,
இனி எதிரிகளின் பிணங்கள்
உன்னிலே.
அவர்களின் இரத்தம்
உன் மீது தெளிப்பதற்கு
நாங்கள் ஆளாக இருப்பதால்
மன்னித்து ஆசிர்வாதம் செய்.
0 comments:
Post a Comment