Blogger news

இன்றைய குறள்

பழமொழி

Blogger templates

Monday, December 19, 2011

உணர்ச்சிகள்


பூமியின் தண்ணீர் வேட்கை
பாலம் பாலமாக பிளந்து இருக்கிறது.
தான் குளிர மேகத்திடம்
இருந்து தண்ணீரை திருடுகிறது.
நிலாவின் குளுமையில் இரு
துருவத்தில் உறைந்து நிற்கிறது.
கோபத்தை ஏனோ மலை மீது
திருப்பி எரிமலையாக மாற்றுகிறது.
தனக்கு காவு வேண்டுமென
நினைத்து பூகம்பத்தையும் வரவைக்கிறது.
ஆனால் கடல் மீது உள்ள காதல்
தன் மீது முத்தமிட அனுமதிக்கிறது.

0 comments:

Post a Comment