Blogger news

இன்றைய குறள்

பழமொழி

Blogger templates

Sunday, December 4, 2011

நம்மை தொலைத்து அடிமையாகிறோம்


படம்:- மயக்கம் என்ன
பாடல்:- ஓட ஓட ஓட தூரம்

மேலே குறிப்பிட்டு உள்ள பாடலின் ராகத்தில் கீழே இருக்கும் வரிகளை நான் மாற்றி உள்ளேன். தயவு செய்து படிக்கும் பொழுது அதே ராகத்துடன் படியுங்கள். நன்றி.

குட்ட குட்ட குட்ட குனிந்து போகிறோம்
வளைந்து வளைந்து கேள்விகுறியாகிறோம்
பயந்து பயந்து போய் அமைதியாகிறோம்
நம்மை தொலைத்து அடிமையாகிறோம்

வீரம் இருக்கும் போது விவேகம் இல்லையே
விவேகம் இருக்கும் போது வீரம் இல்லையே
கையில துடுப்பு இருக்கு பரிசல் இல்லையே
முன்னேறி செல்ல வழியில்லையே

சின்ன நாடுகள் வேகமாக வளருது
என் இனம் இங்கு தேயுது
மற்ற நாடுகள் கிண்டல் பண்ணுது
அரசாங்கம் (govt) கூட ஏமாத்துது

கண்கள் கலங்குது உதிரம் வழிகிறது
வெறுத்து வெறுத்து போய் ஆயுதத்தை கையில் ஏந்தினேன்

என் அறையில தனியாக அழுதேன் அழுதேன்
என் ப்ளாக்கில கிறுக்கனா கிறுக்கினேன்
வலிய தாங்கல தாங்கல கல்மனம் எனக்கில்லையே
ஒன்றா இணையில இணையில பிரிந்து போகிறோமே
கண்கள் கலங்குது உதிரம் வழிகிறது
வெறுத்து வெறுத்து போய் ஆயுதத்தை கையில் ஏந்தினேன்

குட்ட குட்ட குட்ட குனிந்து போகிறோம்
வளைந்து வளைந்து கேள்விகுறியாகிறோம்
பயந்து பயந்து போய் அமைதியாகிறோம்
நம்மை தொலைத்து அடிமையாகிறோம்

வீரம் இருக்கும் போது விவேகம் இல்லையே
விவேகம் இருக்கும் போது வீரம் இல்லையே
கையில துடுப்பு இருக்கு பரிசல் இல்லையே
முன்னேறி செல்ல வழியில்லையே

என் தமிழ்மொழி தேயுது அழியுது அழியுது
அதை கண்ட நெஞ்சம் குமுருது கலங்குது கலங்குது
அழகான நம் மொழி இருக்கையில்
வேற்று மொழி எதற்கு
அதற்கு இருக்கும் சிறப்பு வேறு எங்கே இருக்குது
கண்கள் கலங்குது உதிரம் வழிகிறது
வெறுத்து வெறுத்து போய் ஆயுதத்தை கையில் ஏந்தினேன்

குட்ட குட்ட குட்ட குனிந்து போகிறோம்
வளைந்து வளைந்து கேள்விகுறியாகிறோம்
பயந்து பயந்து போய் அமைதியாகிறோம்
நம்மை தொலைத்து அடிமையாகிறோம்

வீரம் இருக்கும் போது விவேகம் இல்லையே
விவேகம் இருக்கும் போது வீரம் இல்லையே
கையில துடுப்பு இருக்கு பரிசல் இல்லையே
முன்னேறி செல்ல வழியில்லையே

சின்ன நாடுகள் வேகமாக வளருது
என் இனம் மட்டும் இங்கு தேயுது
மற்ற நாடுகள் கிண்டல் பண்ணுது
அரசாங்கம் (govt) கூட ஏமாத்துது

2 comments:

Nam inathin nilamayai pathivu seithathuku nandrigal... Nichayamai meendu ezuvom... thamilanin nilamai seekiram marum...

எங்குமே நம்மால் ஒரு இனிய வாழ்க்கை வாழ இயலவில்லை. மாறியே ஆக வேண்டும். நன்றி வளர்மதி பதிப்பகம்.

Post a Comment