Blogger news

இன்றைய குறள்

பழமொழி

Blogger templates

Thursday, December 22, 2011

கண்டனக் கடிதம்....!

காவல் துறைக்கு நம்முடைய தோழர் ஆல்பர்ட் என்பவர் அனுப்பிய கண்டன கடிதம், இதோ:-

அய்யா,

வணக்கம்.

காவல் துறையின் மிகப் பொறுப்பு வாய்ந்த பதவியில் உள்ள‌
தாங்கள் விவசாயிகளைக் கிள்ளுக்கீரை போல கிரிமினல்கள்
என்று சொல்லியும், தலையை விட்டுவிட்டு கைகால்களை
உடையுங்கள் என்று உத்தரவிட்டுள்ள தங்களுக்கு என்
கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

http://www.youtube.com/watch?v=Ne_HtwMBnpg

அவன் சேற்றில் கால் வைப்பதால்தான் உங்களால்
மூன்று வேளையும் சோற்றில் கை வைக்க முடிகிறது.

அந்தவிவசாயின் வாழ்வாதாரமாகத் திகழுகிற முல்லைப்பெரியாறு
அணை காத்திட சாத்வீகமாக போராடுபவர்கள் உங்களுக்கு
கிரிமினல்களாகத் தெரிகிறார்களா?

காக்கிச் சட்டை போட்டுவிட்டால் உங்கள் மனம் போன போக்கில்
பேச முடியுமா? அந்தச் சட்டைக்கேற்ற பண்பும் வேண்டுமய்யா!

சாப்பாட்டு மேசை முன் அமர்ந்து ஒவ்வொரு கவளத்தையும்
வாயருகே கொண்டு செல்லும்போது எண்ணிப்பாருங்கள்.

நீங்கள் சொல்லியது சரியா?என்று.

தமிழன் என்ற வகையிலும், விவசாயிகள் எங்கள்
ஜீவாதாரமான வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்தவர்கள்
என்ற வகையில் வேதனையோடு என் கடுமையான கண்டனத்தை
உங்களுக்கு மிகுந்த வேதனையோடு தெரிவிக்கிறேன்.

ஆல்பர்ட்.


நகல்:-டி.ஜி.பி. அவர்களுக்கும் இந்தக் கண்டனக் கடித நகல்
அனுப்பப்படுகிறது.

0 comments:

Post a Comment