படம்:- மயக்கம் என்ன
பாடல்:- பிறை தேடும் இரவிலே
மேலே குறிப்பிட்டு உள்ள பாடலை மாற்றி உள்ளேன். இந்த வரிகளை படிக்கும் நண்பர்கள் பாடலின் ராகத்தில் படித்து பாருங்கள்.
கருவண்ண மேக கதறலோ மழை
கண்ணீராய் பூமிக்கு
மண் வாசம் எங்கும் வீசுது
மனம் குளிர்ந்து
நடுவில் மின்னல் கீற்று ஒன்று வானில் ஒளி வீசுது
குளிரான சார காத்து மேனி எங்கும் தழுவுது
வானம் பார்த்து காய்ந்த நிலங்களே
உன்னை நனைத்த கோடைமழை இதே
வானவில்லின் வர்ணஜாலமும்
சாரக்காத்தின் குளுமையும்
எங்கள் மனதை எங்கோ பறக்க அழைத்து செல்லுது
தூறல் நனைக்கும் ஓலையும்
தாவி குதிக்கும் தவளையும்
எங்கள் காதில் இசையை வருடிவிட்டு போகுது
என் வாழ்வின் இனிய நாளாய்
இந்த நாளும் இனிக்குது
சூடான தேநீர் சுவையை
உதடு மகிழ்ந்து சுவைத்தது
வானம் பார்த்து காய்ந்த நிலங்களே
உன்னை நனைத்த கோடைமழை இதே
கருவண்ண மேக கதறலோ மழை
கண்ணீராய் பூமிக்கு
மண் வாசம் எங்கும் வீசுது
மனம் குளிர்ந்து
அசைந்தாடும் மரங்களும்
துள்ளி எழும்பும் மீன்களும்
நன்றி சொல்லி உனக்கு தலையை இசைத்து அசைத்தன
பள்ளிக்கூடத்தில் சிறுவர்கள்
காகிதங்களை மடித்து தான்
ஓடும் கால்வாய் நீரில் ஓடம் விட்டு மகிழ்தனர்
இது மழையின் மீது உள்ள
ஏக்கம் காட்டுது
நீ மீண்டும் நனைப்பாய் என்றே
பூமி ஏங்குது
வானம் பார்த்து காய்ந்த நிலங்களே
உன்னை நனைத்த கோடைமழை இதே
2 comments:
அருமை தோழரே மிகவும் அருமை பாடலுக்கு ஒரு கண்ணதாசன் கருத்துக்கு ஒரு கார்த்திகேயன் என்றும் அன்புடன் வீ.கே
ஹாஹாஹாஹாஹாஹா....உங்கள் குசும்பு இன்னமும் அடங்கவில்லை தோழரே.....
Post a Comment