அந்தி சாயும் நேரம்
செந்நிற கதிர்கள்
மேற்குப் பக்கம்
தேய்ந்துகொண்டிருக்க,
வானமோ
சிகப்பு கம்பளத்தை
தன் மேலே
போத்திக் கொண்டிருக்க,
நெற்கட்டுகளை
களத்தில் அடித்து
கொண்டிருந்தார்கள்
விவசாய்கள்,
கண்ணாம்பூச்சி
விளையாடும் குழந்தைகளையும்,
சிலம்பமும் கபடியும்
பயிலும் இளைஞ்சர்களையும்,
முற்றத்தில் வாசல் தெளிக்கும்
பெண்களையும்,
ரசித்துக் கொண்டே
சிறிது தூரம்
கடந்த என் கால்கள்,
வேகமாக கண்முன்னே
தெரிந்த வழியில்
சிந்திக்காமால் ஓடி கொண்டிருந்தது!
அப்பொழுது என் மூச்சிரைப்பை
தவிர்க்கவும், தாகம் தணிக்கவும்
அருகிலிருந்த ஓடையில்
முகம் எட்டி பார்க்க
அது இரத்த ஆறு....!
ஐயோ ஏன் இந்த சாதிசண்டை.......
0 comments:
Post a Comment