Blogger news

இன்றைய குறள்

பழமொழி

Blogger templates

Friday, December 24, 2010

புகைப்படம் [சிறுகதை - 5]

இரவு இருள் சூழ்திருன்தது. சிவாக்கு மட்டும் தூக்கம் வரவில்லை. படுக்கையில் இருந்து எழும்பினான். மணி பின்னிரவு இரண்டேமுக்கால் ஆகி இருந்தது. தலையணை அருகில் இருந்த வெண்சுருட்டை தீப்பெட்டியுடன் எடுத்துக் கொண்டு முற்றத்திற்கு வந்தான். அவனுடைய இல்லம் பத்தாம் மாடியில் இருந்ததால் நகரத்தின் இரவு அழகை விளக்கொளியில் ரசித்துக்கொண்டே வெண்சுருட்டை முகர்ந்து உதடுகளின் நடுவே வைத்து பற்ற வைத்தான்.

இரண்டு முறை புகையை வெளியே ஊதியவனின் சிந்தனையில், என்று தான் நாம் புகைப்படக்கருவி வாங்க போகின்றமோ? என்ற கேள்வி உதித்த வண்ணம் இருந்தது. புகைப்படக்கருவி வாங்குவதற்காக வைத்திருந்த எழுபத்தைந்தாயிரம் ரூபாவை தன் நண்பனுடைய அவசர தேவைக்காக கொடுத்து ஆறு மாதம் கடந்துவிட்டதை எண்ணி வருந்தினான்.

வீட்டில் மீண்டும் பணம் கேட்ட பொழுது, முதலில் கொடுத்ததை பற்றி அவர்கள் திருப்பி கேட்டு, "உன் நண்பர்களே இப்படி தான், என்று தன் பெற்றோர் அவன் நட்ப்பினையும் நண்பர்களும் கேலி செய்தது நினைவுக்கு வந்தது. அதனால் வீட்டில் இருந்து கூட உதவி கிடைக்காது என்று வருத்தத்தில் மீண்டும் ஒரு முறை புகையினை உள்ளிழுத்து வெளியேற்றினான். நகரமே விளக்கொளில் மின்ன தன்னுடைய வாழ்க்கை மட்டும் இருண்டு விடுமோ என்ற கலக்கத்தில் மீண்டும் மிச்சமிருந்த வெண்சுருட்டை முடித்தான். அவனுடைய தொண்டை வறண்டு போனதை உணர்ந்து பானையிலிருந்து மூன்று குவளை தண்ணீர் அருந்தி விட்டு தன்னுடைய பாயில் தலை சாய்த்தான் சிவா.

கடற்கரையில் தன்னுடைய புகைப்படகருவியுடன் சென்ற அவனுடைய கண்களுக்கு விருந்தாக இருந்தது. காலை கதிரவன் அதனுடைய செந்நிற கீற்றை வானத்தில் பூசியும், கடலில் தெளித்தும் இருந்தது. அக்காட்சி அவனுடைய மனதை வருடியது. தன்னுடைய கருவியில் பல கோணங்களில் பதிவு செய்தான். அப்பொழுது பறவைகளின் இனிமையான குரல் அவன் காதில் கேட்டு நிமிர, மேலே நூற்றுக்கணக்கான பறவைகள் சத்தத்தை எழுப்பி கொண்டு சிறகு விரித்து பறந்துகொண்டிருந்தன. ஆஹா! என்று கூறிக்கொண்டு அதையும் பதிவு செய்துகொண்டான். சற்று பின்னே போய் அப்பறவைகளுடன் சிகப்பு சூரியனையும் சேர்த்து பதிவு செய்து கொண்டான். அப்பொழுது அவன் மனம் எங்கோ பறக்கத் தான் செய்தது. இருக்காதா? வெகு நாட்கள் அவன் நினைத்ததை, நடத்திக் கொண்டிருந்தான். சற்று தூரத்தில் கடலோடு கலக்கும் சிற்றாறை பார்த்தான். சத்தமில்லாமல் அது கடலோடு சங்கமித்துக் கொண்டிருந்தது. அந்த ஆற்றில், ஒரு சிறிய ஓடத்தில் மீனவன் ஒருவன் தனியாக மீன்களை தன் வயிற்ருப் பசிக்காக வலை வீசி கொண்டிருப்பதைப் பார்த்த சிவா, அவன் வலை வீசுவதையும், மீண்டும் ஓடத்தினுள் இழுப்பதையும் பதிவு செய்து கொள்கிறான். தனக்கு பிடித்தமான காட்ச்சிகளை எல்லாம் படம் பிடித்துக்கொண்டு வீட்டினுள் புகுந்து தன்னுடைய கண்ணினியில் பதிவேற்றினான். பின்பு ஒவ்வொன்றாக பார்த்தான். படங்கள் அனைத்தும் அருமையாக அமைந்துவிட, ஆனந்தத்தில் தன்னுடைய இருக்கைகளிளையும் உயர்த்தி அவன் மகிழ்கையில் கை இடறி புகைப்படக்கருவி கீழே விழுந்தது. ஐயோ! என்று பதறி எழுந்தான். அருகில் இருந்த பானை உடைந்திருந்தது. அடடா, இது கனவு என்று நினைத்துகொண்டு படுக்கையில் இருந்து எழும்பினான். நேரம் ஆறரை என்று கடிகாரத்தில் காண்பித்தது.

காலைகடன்களை முடித்துக்கொண்டு காலனியை மாட்டிக்கொண்டு காலை நடைப் பயிற்சிக்கு விரைந்தான். அவன் தினமும் நடை பழகும் இடமான கடற்கரையை அடைந்தான். அங்கு அவன் கனவில் கண்ட காட்ச்சிகளை நிஜமாக பார்த்தான். இதை படம் பிடிக்க முடியவில்லையே என்றெண்ணிக்கொண்டு தன் நண்பனை மனதில் கடிந்து கொண்டான். வீட்டிருக்கு திரும்பி வந்து குளித்து முடித்தான். தொலைகாட்சி பெட்டியை இயக்க, தன்னுடைய வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. சிவா தன்னுடைய வீட்டின் கதவைத் திறக்க, பணம் கொடுக்க வேண்டிய நண்பன் நின்றுகொண்டிருந்தான். அதிசயத்த சிவா வாடா மச்சான், என்னை ஞாபகம் இருக்கிறதா? என்று கூறி வீட்டினுள் அழைத்தான். சிவா காண்பித்த நாற்காலியில் அமர்ந்த அவன், என்னை மன்னித்துவிடு நண்பா! என்று கண்ணீர் மல்க கூறி, கையில் இருந்த பையினுள்ளே இருந்த எழுபத்தைந்தாயிரம் ரூபாவை சிவாவிடம் கொடுத்தான். என்னுடைய தங்கை இப்பொழுது நலமாக இருக்கிறாள் எல்லாம் நீ செய்த உதவியினால் தான் என்று கூறி அழுதான். அவனை தேற்றி அனுப்பிவைத்து புகைப்பட கருவி வாங்க மகிழ்ச்சியாய் சென்றான் சிவா.

0 comments:

Post a Comment