Blogger news

இன்றைய குறள்

பழமொழி

Blogger templates

Thursday, December 16, 2010

ஈன்றெடுத்த தாயே..............

உனக்கு நானும் சுமையானேன்
உன் கருவறையில்!
உனக்கு என்னமோ,
அது சுகமான சுமை தான்!
கனவுகள் எத்தனை
கண்டிருப்பாய் என்னை வளர்ப்பதற்கு!
நான் வளர்கையில்
என்னை கைகளில் தாங்கமால்,
உன் நெஞ்சினில் தாங்கினாய்!
ஏனோ அதுவும் உனக்கு
பிடித்தும் போனது!
என் மேல் இருக்கும் அன்பு
சிதறக் கூடாது என்பதினால்
தான் என்னோடு நிறுத்திக் கொண்டாயோ!
உனக்கென்று ஆசைகள் இருந்தும்
எனக்காக மறைத்துக் கொண்டாய்!
உன் ஆசைகள் அனைத்தையும்
வெளிச்சத்திற்கு காட்டாமல்,
இருட்டறையில் பூட்டிவிட்டாயே!
வளர்ந்தேன் நான், உன்னால்!
கற்றுக்கொடுத்தாயே எனக்கு
பகுத்தறிவு முதல் பொதுஅறிவு வரை,
விளையாட்டு முதல் வீரம் வரை!
அன்னையாய் மட்டுமல்ல,
ஆசானாகவும் திகழ்ந்தாய்!
இப்பூலோகத்தில் கண்டதில்லை
உன் போல் தாயை!
நீ ஆச்சிரியங்கள்
நிறைந்த பெட்டகம்!
நான் இன்றிருக்கும்
நிலைமையை நினைக்கும்
பொழுது, நீ என்னைவிட
துன்புற்றிருப்பாய் என்று
உணர்கிறேன்!!
மன்னித்துவிடு, என் அன்னையே!
வருத்தத்துடன்,
கல்லறையில் உறங்கும்
உனக்காக
முதியோர் இல்லத்தில் இருந்து உன் மகன்!!

0 comments:

Post a Comment