Blogger news

இன்றைய குறள்

பழமொழி

Blogger templates

Tuesday, December 28, 2010

என்னுள் நீ

இருளை கிழித்த
ஒளி..
கரும் பாறையினுள்
நீர்..
சுடும் பாலையினுள்
சோலை..
இறுதி முடிவினில்
துவக்கம்..

Monday, December 27, 2010

நீ

தீபத்தின்
ஒளியில்
உன்னை கண்டேன்.
விட்டில் பூச்சியாய்
நான்!

சிகப்பு விளக்கு



இங்கு

காமம்

மலிவாக

கிடைக்கும்!

இலவசமாக

உயிர்க்கொள்ளி

நோய்.......

விந்தை

புற்களின்
சீதனம்,
சூரியனுக்காக.
பனித்துளி!

காலை

விடியலை
வெண்பட்டு
போற்றி
வரவேற்றது,
மார்கழி மாதம்.

முடிவு

உடையப்போவது தெரியாமல்
ஆயிரம்
ஆசைகளோடு
என்னைப் போல்
வேகமாய்
நகர்கிறது,
நீர்க்குமிழி!

எத்தனை நேரம்?

தனக்கு அளிக்கப்பட
மகுடம் என்று,
என்னை
போல்
நிமிர்ந்து நிற்கிறது
புற்கள்.
மகுடமாய் பனித்துளிகள்!

கவனியுங்கள்!



"என்னை உபயோகப்படுத்துங்கள்"

என்று

தன்னில் எழுதிக்கொண்டிருக்கிறது

குப்பைத் தொட்டி.

கவனியுங்கள்!

பயன்படுத்துங்கள்..........

Friday, December 24, 2010

புகைப்படம் [சிறுகதை - 5]

இரவு இருள் சூழ்திருன்தது. சிவாக்கு மட்டும் தூக்கம் வரவில்லை. படுக்கையில் இருந்து எழும்பினான். மணி பின்னிரவு இரண்டேமுக்கால் ஆகி இருந்தது. தலையணை அருகில் இருந்த வெண்சுருட்டை தீப்பெட்டியுடன் எடுத்துக் கொண்டு முற்றத்திற்கு வந்தான். அவனுடைய இல்லம் பத்தாம் மாடியில் இருந்ததால் நகரத்தின் இரவு அழகை விளக்கொளியில் ரசித்துக்கொண்டே வெண்சுருட்டை முகர்ந்து உதடுகளின் நடுவே வைத்து பற்ற வைத்தான்.

இரண்டு முறை புகையை வெளியே ஊதியவனின் சிந்தனையில், என்று தான் நாம் புகைப்படக்கருவி வாங்க போகின்றமோ? என்ற கேள்வி உதித்த வண்ணம் இருந்தது. புகைப்படக்கருவி வாங்குவதற்காக வைத்திருந்த எழுபத்தைந்தாயிரம் ரூபாவை தன் நண்பனுடைய அவசர தேவைக்காக கொடுத்து ஆறு மாதம் கடந்துவிட்டதை எண்ணி வருந்தினான்.

வீட்டில் மீண்டும் பணம் கேட்ட பொழுது, முதலில் கொடுத்ததை பற்றி அவர்கள் திருப்பி கேட்டு, "உன் நண்பர்களே இப்படி தான், என்று தன் பெற்றோர் அவன் நட்ப்பினையும் நண்பர்களும் கேலி செய்தது நினைவுக்கு வந்தது. அதனால் வீட்டில் இருந்து கூட உதவி கிடைக்காது என்று வருத்தத்தில் மீண்டும் ஒரு முறை புகையினை உள்ளிழுத்து வெளியேற்றினான். நகரமே விளக்கொளில் மின்ன தன்னுடைய வாழ்க்கை மட்டும் இருண்டு விடுமோ என்ற கலக்கத்தில் மீண்டும் மிச்சமிருந்த வெண்சுருட்டை முடித்தான். அவனுடைய தொண்டை வறண்டு போனதை உணர்ந்து பானையிலிருந்து மூன்று குவளை தண்ணீர் அருந்தி விட்டு தன்னுடைய பாயில் தலை சாய்த்தான் சிவா.

கடற்கரையில் தன்னுடைய புகைப்படகருவியுடன் சென்ற அவனுடைய கண்களுக்கு விருந்தாக இருந்தது. காலை கதிரவன் அதனுடைய செந்நிற கீற்றை வானத்தில் பூசியும், கடலில் தெளித்தும் இருந்தது. அக்காட்சி அவனுடைய மனதை வருடியது. தன்னுடைய கருவியில் பல கோணங்களில் பதிவு செய்தான். அப்பொழுது பறவைகளின் இனிமையான குரல் அவன் காதில் கேட்டு நிமிர, மேலே நூற்றுக்கணக்கான பறவைகள் சத்தத்தை எழுப்பி கொண்டு சிறகு விரித்து பறந்துகொண்டிருந்தன. ஆஹா! என்று கூறிக்கொண்டு அதையும் பதிவு செய்துகொண்டான். சற்று பின்னே போய் அப்பறவைகளுடன் சிகப்பு சூரியனையும் சேர்த்து பதிவு செய்து கொண்டான். அப்பொழுது அவன் மனம் எங்கோ பறக்கத் தான் செய்தது. இருக்காதா? வெகு நாட்கள் அவன் நினைத்ததை, நடத்திக் கொண்டிருந்தான். சற்று தூரத்தில் கடலோடு கலக்கும் சிற்றாறை பார்த்தான். சத்தமில்லாமல் அது கடலோடு சங்கமித்துக் கொண்டிருந்தது. அந்த ஆற்றில், ஒரு சிறிய ஓடத்தில் மீனவன் ஒருவன் தனியாக மீன்களை தன் வயிற்ருப் பசிக்காக வலை வீசி கொண்டிருப்பதைப் பார்த்த சிவா, அவன் வலை வீசுவதையும், மீண்டும் ஓடத்தினுள் இழுப்பதையும் பதிவு செய்து கொள்கிறான். தனக்கு பிடித்தமான காட்ச்சிகளை எல்லாம் படம் பிடித்துக்கொண்டு வீட்டினுள் புகுந்து தன்னுடைய கண்ணினியில் பதிவேற்றினான். பின்பு ஒவ்வொன்றாக பார்த்தான். படங்கள் அனைத்தும் அருமையாக அமைந்துவிட, ஆனந்தத்தில் தன்னுடைய இருக்கைகளிளையும் உயர்த்தி அவன் மகிழ்கையில் கை இடறி புகைப்படக்கருவி கீழே விழுந்தது. ஐயோ! என்று பதறி எழுந்தான். அருகில் இருந்த பானை உடைந்திருந்தது. அடடா, இது கனவு என்று நினைத்துகொண்டு படுக்கையில் இருந்து எழும்பினான். நேரம் ஆறரை என்று கடிகாரத்தில் காண்பித்தது.

காலைகடன்களை முடித்துக்கொண்டு காலனியை மாட்டிக்கொண்டு காலை நடைப் பயிற்சிக்கு விரைந்தான். அவன் தினமும் நடை பழகும் இடமான கடற்கரையை அடைந்தான். அங்கு அவன் கனவில் கண்ட காட்ச்சிகளை நிஜமாக பார்த்தான். இதை படம் பிடிக்க முடியவில்லையே என்றெண்ணிக்கொண்டு தன் நண்பனை மனதில் கடிந்து கொண்டான். வீட்டிருக்கு திரும்பி வந்து குளித்து முடித்தான். தொலைகாட்சி பெட்டியை இயக்க, தன்னுடைய வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. சிவா தன்னுடைய வீட்டின் கதவைத் திறக்க, பணம் கொடுக்க வேண்டிய நண்பன் நின்றுகொண்டிருந்தான். அதிசயத்த சிவா வாடா மச்சான், என்னை ஞாபகம் இருக்கிறதா? என்று கூறி வீட்டினுள் அழைத்தான். சிவா காண்பித்த நாற்காலியில் அமர்ந்த அவன், என்னை மன்னித்துவிடு நண்பா! என்று கண்ணீர் மல்க கூறி, கையில் இருந்த பையினுள்ளே இருந்த எழுபத்தைந்தாயிரம் ரூபாவை சிவாவிடம் கொடுத்தான். என்னுடைய தங்கை இப்பொழுது நலமாக இருக்கிறாள் எல்லாம் நீ செய்த உதவியினால் தான் என்று கூறி அழுதான். அவனை தேற்றி அனுப்பிவைத்து புகைப்பட கருவி வாங்க மகிழ்ச்சியாய் சென்றான் சிவா.

ஜனிக்கிறேன்

திடீர் திருப்பம்!
சாலையில்
மட்டுமல்ல,
என் வாழ்விலும் தான்.
உன்னை பார்த்த அந்நாள்,
மீண்டும் பிறந்தேன்!
பணியில் ஓய்வடைந்து
வாழ்க்கையில் ஓயாமல்
திரும்புகையில்,
இன்றும் நினைக்கிறேன்,
அந்நாளை!
இனி உன் கைகோர்த்து,
மாலை நேரங்களில்
நான் உலா வருவதை
என்னும் பொழுது,
என்னுள்ளம் எங்கோ
பறக்க தான் செய்கிறது!
அதனால் நான் இன்றும்
ஜனிக்கிறேன்!

உனக்கு நான்..

என் பள்ளிபருவத்தின் சாரல் நீயே!
என் பூந்தோட்டத்தின் வாசம் நீயே!
என் தடாகத்தின் தாமரை நீயே!
என் முற்றத்தின் தென்றல் நீயே!
என் தீபவிளக்கின் சுடர் நீயே!
என் ஆருயிரின் சுவாசம் நீயே!
என் வாழ்வின் அனைத்தும் நீயே!
நீயே என்னை ஈன்றாய்....
பத்து மாதம்
என்னை கருவறையில்
சுமந்து,
வலியை பொறுத்து,
நான் இவ்வுலகைப்
பார்த்த நாளில்
என்னை பார்த்து
ரசித்தாயே!
உனக்கு நான் என்றும்
அடிபணிகிறேன்!

குருதி புனல்

அந்தி சாயும் நேரம்
செந்நிற கதிர்கள்
மேற்குப் பக்கம்
தேய்ந்துகொண்டிருக்க,
வானமோ
சிகப்பு கம்பளத்தை
தன் மேலே
போத்திக் கொண்டிருக்க,
நெற்கட்டுகளை
களத்தில் அடித்து
கொண்டிருந்தார்கள்
விவசாய்கள்,
கண்ணாம்பூச்சி
விளையாடும் குழந்தைகளையும்,
சிலம்பமும் கபடியும்
பயிலும் இளைஞ்சர்களையும்,
முற்றத்தில் வாசல் தெளிக்கும்
பெண்களையும்,
ரசித்துக் கொண்டே
சிறிது தூரம்
கடந்த என் கால்கள்,
வேகமாக கண்முன்னே
தெரிந்த வழியில்
சிந்திக்காமால் ஓடி கொண்டிருந்தது!
அப்பொழுது என் மூச்சிரைப்பை
தவிர்க்கவும், தாகம் தணிக்கவும்
அருகிலிருந்த ஓடையில்
முகம் எட்டி பார்க்க
அது இரத்த ஆறு....!
ஐயோ ஏன் இந்த சாதிசண்டை.......

Thursday, December 23, 2010

உண்மை!

தன்னம்பிக்கையாலனின்
பலம்....

என்னை இழந்தேன்.........

சோலையே நீ பாலையானாய்,
உண்மையே நீ பொய் ஆனாய்,
நிஜமே நீ நிழலானாய்,
நீரோடையே நீ கானலானாய்,
பகலே நீ இரவானாய்,
என்னவள் நிஜம் உட்புகுந்ததினால்,
உயிரே நீ மரணமானாய்!!!!!

நம்முடையது

தமிழா.......
நிதானமாயிரு,
கண்முழித்திரு,
விழித்திரு,
படித்திரு,
எதிர்பார்த்திரு,
சரித்திரம் படைத்திரு,
நாளைய தமிழ் ஈழம் நம்முடையது!

காண்பாயா

கவிதை எழுத
காலம் இல்லை!
வரிகள் வடிக்க
வாய்ப்பில்லை!
எழுத்துக்கள் கோர்த்து
ஏங்க தோன்றவில்லை!
உவமை உதிர்க்க
ஊக்கமில்லை!
என்னவளே, ஆனால்
ஏங்குகிறேன் உனக்காக,
எழுத்துக்கள் கோர்த்து,
வரிகள் வடித்து, உவமையுடன்
கவிதை எழுத,
கனிவுடன் என்னை
காண்பாயோ?

Thursday, December 16, 2010

ஈன்றெடுத்த தாயே..............

உனக்கு நானும் சுமையானேன்
உன் கருவறையில்!
உனக்கு என்னமோ,
அது சுகமான சுமை தான்!
கனவுகள் எத்தனை
கண்டிருப்பாய் என்னை வளர்ப்பதற்கு!
நான் வளர்கையில்
என்னை கைகளில் தாங்கமால்,
உன் நெஞ்சினில் தாங்கினாய்!
ஏனோ அதுவும் உனக்கு
பிடித்தும் போனது!
என் மேல் இருக்கும் அன்பு
சிதறக் கூடாது என்பதினால்
தான் என்னோடு நிறுத்திக் கொண்டாயோ!
உனக்கென்று ஆசைகள் இருந்தும்
எனக்காக மறைத்துக் கொண்டாய்!
உன் ஆசைகள் அனைத்தையும்
வெளிச்சத்திற்கு காட்டாமல்,
இருட்டறையில் பூட்டிவிட்டாயே!
வளர்ந்தேன் நான், உன்னால்!
கற்றுக்கொடுத்தாயே எனக்கு
பகுத்தறிவு முதல் பொதுஅறிவு வரை,
விளையாட்டு முதல் வீரம் வரை!
அன்னையாய் மட்டுமல்ல,
ஆசானாகவும் திகழ்ந்தாய்!
இப்பூலோகத்தில் கண்டதில்லை
உன் போல் தாயை!
நீ ஆச்சிரியங்கள்
நிறைந்த பெட்டகம்!
நான் இன்றிருக்கும்
நிலைமையை நினைக்கும்
பொழுது, நீ என்னைவிட
துன்புற்றிருப்பாய் என்று
உணர்கிறேன்!!
மன்னித்துவிடு, என் அன்னையே!
வருத்தத்துடன்,
கல்லறையில் உறங்கும்
உனக்காக
முதியோர் இல்லத்தில் இருந்து உன் மகன்!!

விடுப்பு

ஏமாற்றம் இருக்காது
ஆசைகளுக்கு
விடுப்பு கொடுத்தால்!

Thursday, December 9, 2010

பொய்!!

பயன்தாங்கோளிகளின்
ஆயுதம்.......

பயம்!

தோழமையிடம்
கூட உண்மையை
மறைக்க
சொல்கிறது
மகிழ்ச்சியான பொழுது
வார்த்தைகள் சிதறும்,
கோபமான பொழுதில்
தடுமாறும்!

கேள்விகள்

என்றுமே பதில்
தருவதில்லை,
சில நேரங்களில்
ஆச்சிரியம் மட்டுமே
மிஞ்சும்!!

உள்ளுணர்வு

நம்மை போல் எல்லோரையும்
நினைக்கூடாது,
ஏன் என்றால் நாம் செய்யும்
தவறை
அவர்களும் செய்வார்கள்
என்று நாம் நினைக்கூடும்!!

Tuesday, December 7, 2010

கண்ணீர் அருவி

உன் வீட்டின்னுலே
இருக்கும் பௌண்டைனை
பார்க்கும் பொழுது,
என் கண்ணீர் அருவி
பாய்வது போல் தெரிகிறது!!!

என் கவிதை நோட்டு.....





உன்னைப்பற்றியே

எழுத்துக்கள் பொறித்த என்

காதல் கல்வெட்டு!!

அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே

(கோழி கூவுது திரைப்படம் என்று ஒரு தோழி கூறினார்)


அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே
நம்ம ஊரு நல்ல ஊரு
இப்போ ரொம்ப கேட்டு போச்சி அண்ணே
அதே சொன்னா வெட்கக்கேடு
நான் சொல்லாட்டி மானக்கேடு [அண்ணே அண்ணே]

சோலைக்காட்டு மூலையிலே,
ஒரு ஜோடி ஒன்னு சேர்ந்திருச்சி
நல்ல சோளமும் விளஞ்சிருச்சி
இரண்டும் அதுக்குள்ளே ஒளிஞ்ச்சிருச்சி
மேளம் இல்லாமல் பாட்டு கேட்க்குது,
அதுல எங்க நோட்டம் இருக்குது!
மேளம் இல்லாமல் பாட்டு கேட்க்குது,
அதுல எங்க நோட்டம் இருக்குது!
ஆளு யாருன்னு பார்க்க போனேன்,
அதுக்குள் ஓடிப் போச்சிஅண்ணே!
[அண்ணே அண்ணே]

அவங்க அவங்க இஷ்ட்டம் போலே
இப்போ அதிகாரம் பண்ணுறாங்க
ஆளுக்குஆளு நாட்டாமை
எங்களை ஆளு வச்சி அடிக்குறாங்க,
ஒன்னாரையனா காய்கறியை
ஒன்னாரூபா ஆக்கிபுட்டாங்க
சொல்லுறத நான் சொல்லிபுட்டேன் நான்
செய்யுறதா செஞ்சிபுடுங்க
[அண்ணே அண்ணே]