Blogger news

இன்றைய குறள்

பழமொழி

Blogger templates

Thursday, February 18, 2010

நீங்கள் எச்சில் இலைகள்

புழுவாக இருங்கள்,
வெய்யிலில் உங்களை
வாட்டி எடுப்பார்கள்!

நீங்கள்
நாயைப் போல்
நன்றியுடன் வாலாட்டி,
அடுத்தவர்களின் காலை
நக்கி தான் பிழைக்க வேண்டும்!

சொட்டுத் தண்ணீர்
கூட கொடுக்காத
மாநில முதல்வர்களுக்கு,
பாலாலும் தேனாலும்
அபிஷேகம் செய்யவேண்டும்!

வந்தாரை வாழவைத்த
தமிழர்கள்,
குனிந்து குனிந்து
கோமணம் இழந்து
அம்மணமாகத் தான் திரியவேண்டும்!

எதிர்த்தால் தேசிய
பாதுகாப்பு சட்டம் பாயும்!
என்னென்றால் அது
தமிழர்களுக்காக மட்டுமே
உருவாக்கப்பட்டது!

இந்தியா என்ற
திருநாட்டில்,
பயன்படுத்தி,
தூக்கிஎரியப்படுகிற,
எச்சில் இலைகள்
தான் தமிழர்கள்!

0 comments:

Post a Comment