வசந்தம் என்பது
கனவில் மட்டும் தான்,
ஏமாற்றும் அரசியல்
சூறாவளிகள் இருக்கும் வரை!
தென்றல் என்பது
வார்த்தையில் மட்டும் தான்,
அமிலத்தை காற்றில் கலக்கும்
பட்டறைகள் இருக்கும் வரை!
படிப்பு என்பது
பணம் படைத்தவர்களுக்கு மட்டும் தான்
சமச்சீர் கல்வி
வரும் வரை!
தமிழக மக்களுக்கு
வாழ்க்கை என்பது
வெறுமை மட்டும் தான்
இலவச வண்ண தொலைக்காட்சி
மற்றும் ஒரு ரூபாய் அரிசி
உள்ள வரை!
0 comments:
Post a Comment