பரசுராமுக்கு நகர வாழ்க்கை வித்தியாசமாய் இருந்தது. சென்ற வாரம் தான் தன்னுடைய மகன் பரசுவை நகரத்திருக்கு அழைத்து வந்தான். சும்மா உட்கார்ந்து கொண்டு இருப்பது பரசுவிற்கு பிடிக்காது. காலை பால் வாங்க 5:30 மணிக்கு சென்றுவிடுவார். மருமகளுடன் பாலை கொடுத்துவிட்டு சிறிது தூரம் கால்நடையாக செல்வார். காலை சிற்றுண்டி முடித்துவிட்டு செய்தித்தாளை படித்த முடித்த சில நேரங்களில் அவனுடைய மருமகள் சரியாக 11 மணிக்கு தேநீர் கொடுப்பாள். தேநீர் அருந்திய பிறகு ஒரு குட்டித் தூக்கம். பிறகு மதிய உணவு 1:30 மணிக்கு உட்கொள்ளும் பொழுது தொலைக்காட்சியில் செய்தி பார்ப்பார். பிறகு ஒரு குட்டி தூக்கம். மாலை 5 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பி அந்த நகரை ஒரு சுற்று நடந்து வருவதை நகரத்திருக்கு வந்த ஒரு வாரமாக செய்து கொண்டிருகின்றார். அப்பொழுது அந்த நகரில் உள்ள ஒரு சிறிய விளையாட்டு திடலில் வாலிபர்கள் வலைப் பந்து (volley ball)விளையாடி கொண்டிருந்தனர். பெரும்பாலான விளையாட்டு விதிகள் பரசுவிற்கு தெரியும், சில விளையாட்டுகள் விளையாடவும்செய்தார்.
வலைப் பந்து அவருக்கு சுமார விளையாட தெரிந்ததால் தினமும் அதை காணும் ஆவலில் அங்கே வந்து விடுவார். அன்றும் அதே போல் நின்று கொண்டு வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார். அன்று விளையாடும் வாலிபர்களுக்கு ஒருவர் தேவைப்பட்டது. பரசு தினமும் வேடிக்கைப் பார்ப்பது அவர்களுக்கு தெரியும், அதனால் அன்று பரசுவை விளையாட அழைத்தனர். அவருக்கும் விளையாடும் ஆசை இருந்ததால் விளையாடினார். வயது கடந்த காரணத்தால் அவரால் முன்பு போல் சிறப்பாக செயல்பட முடியாவிட்டாலும் அந்த வாலிபர்கள் அவரை வெகுவாக பாராட்டினார்கள். எப்பொழுதும் வீடிற்கு 6 மணி அளவில் நுழைந்துவிடும் மாமனார் அன்று விளையாடியதால் வராத காரணத்தால் மருமகள் சற்று பயந்து விட்டாள்.
அன்று பரசுவோ நேரம் சென்று கொண்டிருப்பதை மறந்து, அந்த வாலிபர்களிடம் தனது சிறுவயது விளையாட்டு அன்புவங்களை பகிர்ந்துகொண்டார். வாலிபர்களோ தினமும் அவரை விளையாட அழைத்தனர். மேலும் அவர்கள் கல்லூரி விடுமுறை நெருங்குவதால் இரண்டு நாட்களுக்கு பிறகு காலை பொழுதிலும் விளையாடுவதாக தெரிவித்தனர் மற்றும் பரசுவையும் அழைத்தனர். நகரத்திற்கு வந்த ஒருவாரத்தில் அன்று தான் பரசு மகிழ்ச்சியாக வீட்டினுள் நுழைத்தார்.
நுழையும் பொழுது தன மகன் வந்திருப்பைதைப் பார்த்தார். அப்பொழுது தான் அவர் நேரம் நிச்சயமாக 8ஐ கடந்திருக்கும் என்று உணர்ந்தார். தந்தை மிகவும் வியர்வை வழிந்தும், அழுக்காகவும் வருவதைக் கண்ட மகன் தந்து தந்தையை இந்த வயதுக்கு மேல் விளையாட்டு தேவையா என்று கேட்டு கடிந்து கொண்டான். அப்பொழுது பரசுவிற்கு சுருக்கென்றது. மகன் கடிந்த்கொண்டானே என்ற வருத்தம் இருந்தாலும் அவனுக்கு விளையாட்டின் மீது ஆர்வம் குறைவு என்று அவருக்கு தெரிந்ததால் அவர் அதைப் பற்றி பெரிதும் கவலைப்படவில்லை. இருந்தாலும் சிருவருத்தம் இருந்தது.
ஆனால் பரசுராமோ தினமும் விளையாடிவிட்டு அவரின் மகன் வருவதற்குள் வீடு திரும்பினார். திடலில் விளையாடும் வாலிபர்களுக்கு கல்லூரி விடுமுறை; ஆதலால் காலை 6:30 மணி முதல் 8 மணி வரை விளையாடுவார்கள். பரசுவோ காலை விரைவில் எழுந்து பால் வாங்கி வீட்டில் வைத்து விட்டு 6:45 மணிக்கெல்லாம் விளையாட சென்று விடுவார்.
ஒரு நாள் 7 மணிக்கெல்லாம் வீடு வருகிறார். அன்று அவருடைய மகன் எதார்த்தமாக வீட்டிற்கு வெளியே வர உடம்பில் இரத்தத்துடன் வரும் தந்தையைப் பார்க்கிறான். அவனின் கோபம் அதிகரித்தது. தன்னுடைய தந்தையைப் பார்த்துகடுமையாக திட்டுகிறான். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இதைப் பார்கின்றார்கள். அதனால் மிகவும் அவமானப்படுகிறார் பரசு.
தானும் தனது மனைவியும் மகனை எப்படி வளர்த்தனர் என்று அந்த நேரத்தில் நினைவு கொள்கிறான். தன் மனைவி அவரைப் பிறந்ததை எண்ணி மிகவும் வருந்துகிறார்.
அப்பொழுது தான் ஒரு வாலிபனை 5 நபர்கள் இழுத்து வருகின்றனர். அவன் கையில் ஒரு பை இருந்தது.
அந்த வாலிபன் ஒரு திருடன். பரசு பால் வாங்கிவிட்டு திரும்பி வந்து வீட்டு சமையலறைக்குள் வைக்கும் பொழுது சப்தம் கேட்டு கொல்லை பக்கம் சென்றுப் பார்க்கும் பொழுது ஒருவன் ஒரு பையுடன் வீட்டு மதில் சுவரை தாண்டி ஓடினான். அவனை துரத்தி சென்று பிடிக்கும் முயற்ச்சியில் தான் அவருக்கு காயம் ஏற்ப்பட்டது. இருந்தாலும் விடாமல் துரத்தும் பொழுது அவன் விளையாட்டு திடலுக்குள் செல்ல அங்கே இவருடன் வில்லையாடும் வாலிபர்கள் அந்தத் திருடனை மடக்கிப் பிடித்தனர். அந்தத் திருடனை அங்கே இழுத்துவந்தனர்.
அந்தப் பையைப் திறந்து பார்க்கும் பொழுது அதனுள் அவர் மகனுடைய மடிக்கணினி இருந்தது. மகன் அதைப் பார்த்தவுடன் உறைந்துப் போகின்றான். அதனுள் அலுவக ரகசியங்கள் நிறையவே அடங்கயுள்ளது என்பது அவனுக்கு தெரியும். மேலும் அது தொலைந்து விட்டால் இவனுடைய வேலை போய்விடும் என்பதும் அவனுக்குதெரியும்.
தன் தந்தை இந்த வயதிலும் துணிந்து ஒரு திருடனை பிடிக்கிறார் என்றால் அவருடைய ஆரோக்கியத்திருக்கு காரணம் விளையாட்டு தான் என்று உணர்ந்து மிகவும் வருந்தி தன் தந்தையிடம் மன்னிப்பு கோருகிறான்.
0 comments:
Post a Comment