Blogger news

இன்றைய குறள்

பழமொழி

Blogger templates

Wednesday, February 3, 2010

குடும்பத்திற்காக [சிறுகதை-2]


வாசலில் தன் தோழிகளோடு விளையாடிக் கொண்டிருகின்றாள் மாலதி. அவள் வயது அப்பொழுது 11. மிகச் சாதரணமாக எல்லோரையும் போல பள்ளிகூடத்திருக்கு சென்று கொண்டிருந்தாள். மாலை பொழுது பள்ளியிலிருந்து திரும்பி வரும் மாலதி புரட்சி கவி பாரதி கூறியது போல் மாலை முழுவதும் விளையாடி விட்டு, வீட்டிருக்கு திரும்பி குளித்துவிட்டு தன் வகுப்பு ஆசிரியர்கள் கொடுத்த வீட்டு பாடங்களை முடித்து விட்டு இரவு உணவு அருந்தி விட்டு மிக சுகமான தூங்குவாள்.

காலையில் எழும்பி முந்தய நாள் வகுப்பில் நடத்திய பாடங்களை படித்து விட்டு பள்ளிக்கு செல்வாள். அவள் வகுப்பில் முதல் மாணவியாக திகழ்ந்தாள். தன் குடும்பத்துடனும் தன் தோழிகளுடன் மகிழ்ச்சியாய் இருந்தாள்.

அந்த நாள் அவள் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டாள். அந்த கருப்பு நாள் என்றுமே அவள் மனதில் நீங்கா சோகத்தைக் கொடுத்தது.

அன்று அவள் பள்ளி முடிந்து வீட்டுக்குள் நுழைந்த பொழுது அவள் கண்ட காட்சி, அவளின் அம்மாவும் அக்காவும் அவளின் கண் முன்னால் நிர்வாணப்படுத்தப்பட்டு சித்தரவதைக்கு உட்படுத்தப்பட்டனர். அவளின் தந்தையோ கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார். அங்கே பத்து பேர் கேலியாக அவளுக்கு தெரியாத மொழியில் பேசி சிரித்துக் கொண்டிருக்க, இருவர் இவளின் சொந்தங்களின் கற்புடன் விளையாடி கொண்டிருந்தார்கள். இருவர் இவளைப் பார்த்து திரும்ப முயற்சிக்கும் முன் அலறிக்கொண்டு சிட்டாக பறக்கின்றாள் மாலதி.

அவள் தோழிகளுடன் விளையாடிய தெருவில் உயிருக்கு அஞ்சி ஓடிகொண்டிருக்கின்றாள். ஓடும் பொழுது அவள் துரத்தப்படுகின்றாளா என்று பார்த்து கொண்டே ஓடுகின்றாள். ஒரு சமயத்தில் பின்னால் யாரும் வரவில்லை என்று தெரிந்தவுடன் தன் ஓட்டத்தை நிறுத்திக் கொண்டு மறைவான இடம் தேடி அமர்கின்றாள். அவளது மரண பயம் இன்னமும் போகவில்லை என்று அவளின் முகத்தில் தெரிகிறது. அவளுடைய மூச்சிறைப்பு மட்டும் நிற்கவில்லை. வெகு தூரம் ஓடி வந்ததால் களைப்பும், தாகமும் அவளை வாட்டியது. பக்கத்தில் ஓடிய நீரோடையில் மாலதி தாகம் தனிக்கின்றாள்.

அப்பொழுது மீண்டும் அவளின் சிந்தனையில் அவள் கண்ட துயர நிகழ்ச்சி நினைவில் தோன்ற அம்மா என்று அலறியவளுக்கு அவள் வார்த்தை அவளின் காதில் விழவில்லை. ஆனால் அவள் நீரோடையின் ஓசையையும், இலைகள் அசையும் ஒலியையும் கேட்க முடிகிறது. அப்பொழுது தான், பேசும் திறனை இழந்தது அவளுக்கு தெரியவந்தது. ஆம் அந்த காட்சியை கண்ட மாலதி பேசாமடந்தை ஆனாள்.

என்ன செய்வதென்றே தெரியாமல் அவள் வாழ்க்கை இருட்டு ஆகிவிட்டது என்று நினைத்து கொண்டிருந்தாள். அவளின் வீட்டில் தான் அக மகிழ்ந்த நாட்களை நினைத்துப் பார்த்தாள். அப்பொழுது அவள் நினைவில் தன் குடும்பத்தை சிதைத்த முகங்கள் தோன்றுகின்றது. மிகுந்த கோபத்துடன் தன்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லையே என்று நினைக்கும் பொழுது, அவளின் தோளை ஒரு கை பற்றுகிறது.

தன்னை துரத்தியவனோ என்ற அச்சத்துடன் திரும்புகிறாள். ஆனால் அவள் ஒரு பெண். அவனைப் போலவே உடை அணிந்திருந்தாள். மேலும் பீதி மாலதியை பற்றிக்கொண்டது. யாரம்மா நீ என்று அந்த பெண் மாலதியின் தாய் மொழியில் வினா எழுப்ப, பதில் கூற இயலாமல் தன் நிலைமையை சைகையில் விளக்கி கண்ணீர் வடிகின்றாள். ஆனால் உள்ளுக்குள் தனக்கு ஒரு துணை கிடைத்தது என்ற மகிழ்ச்சியுடன் அவளின் கையை பற்றிகொள்கிறாள்.

தன்னை ஒரு சகோதரிப் போல் பாவிக்கும் அவளின் பெயர் என்னவென்று தெரிந்துகொள்ள முடியவில்லை என்ற வருத்தம் மாலதிக்கு இருந்தது. இரவு முழுவதும் பற்றிய கரத்தை மாலதி விடவில்லை. விடியும் பொழுது இருவரும் ஒரு இல்லத்தில் நுழைகின்றனர்.

அங்கே நிறைய சிறுவர்கள் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருக்கின்றார்கள். அதைப் பார்ப்பதற்கு ஒரு வகுப்பறைப் போன்று தெரிந்தது. பிறகு மாலதி அந்தப் பெண்ணிடம் நடந்தது அனைத்தையும் எழுதி காண்பித்து அழுதுதாள். அனைத்தையும் புரிந்துக் கொண்டு மாலதியை அந்தப் பெண் அரவணைத்தாள். அந்த அரவணைப்பு தன் தாயிடம் இருப்பதை போல் உணர்ந்தாள் மாலதி.

அதே இடத்தில் தனது 16 வயதைக் கடந்தாள் மாலதி. ஆனால் தன் குடும்பம் சிதைந்து போனது மட்டும் அவள் மனதில் மாறாத வடுவாக இருந்தது. மாலதிக்கு தன் இனத்தின் வரலாறுகள் அங்கே கற்றுக்கொடுக்கப்பட்டது. தன் இனம் பட்ட காயங்கள், வலிகள், அவமானங்கள் அனைத்தையும் அறிந்து கொண்டாள் மாலதி. தன் இன விடிவுக்கான போராட்டத்தையும் அறிந்துகொண்டு அவளும் தன்னை அர்ப்பணிப்பது தான் சிறந்தது என்றும் முடிவு செய்கின்றாள்.

அப்பொழுது தான் அவளின் குடும்பத்தைக் சிதைத்த இராணுவ தளபதி பற்றி தகவலை சேகரித்தாள். அப்பொழுது அந்த தளபதியை பழி வாங்க அவர்களின் இயக்கத்தில் திட்டம் தீட்டிகொண்டிருப்பதை அறிந்தாள். அவள் தன்னுடைய ஆசையை வெளிபடுத்த, திட்டங்கள் முழுவதும் அவளுக்கு கூறப்பட்டது.

இந்த தருணத்தை முழுவதும் பயன்ப்படுத்தி கொள்ள முடிவு செய்தாள். அதை செயல்படுத்த அவள் தன்னை தயார் செய்து கொண்டாள். திட்டமிட்டபடி மாலதி அந்த தளபதி நோக்கி புறப்பட்டு சென்றாள். போகும் வழியில் பல தடைகள் கடந்து தன்னுடைய இலக்கு நோக்கிச் சென்றாள். திட்டமிட்டபடி அந்த தளபதியின் வாகனம் மீது குதித்து, தன் குடும்பத்தாரை மனதில் நினைத்து கையில் வைத்திருந்த இயக்கியை இயக்கி வெடித்துசிதறினாள். அவளுடன் அந்த கொடூர தளபதியும் கருகி இறந்தான்.

தன் குடுப்பம் சிதைந்து போனதற்கு காரணமான தளபதியை கொன்றோம் என்ற மன நிம்மதியுடன் அவளுது ஆத்மா பிரிகின்றது. அவள் ஒரு மாவீரர் ஆனாள். இனத்திற்காக தன்னை அர்ப்பணித்தால் இன்று அவளது குழு அவள் புகைப்படம் முன் நின்று மௌன அஞ்சலி தெரிவித்தது.

2 comments:

arumayaana siru kathai thozhare umaichchithaivugalai appadiye prathibalikkirathu

மிக்க நன்றி சுரேந்தர். நான் இத்தனை எழுத்துக்கள் கோர்த்து எழுதியதை உங்கள் ஒரு படம் அப்படியே கான்பித்துவிட்டது. மிக்க நன்றி....

Post a Comment