நாங்கள் கேட்கமாட்டோம்
என்று எங்கள் சிறார்களை
கொன்று ஒழிதீர்கள்....
எங்களை ஒடுக்குங்கள்!
நாங்கள் ஊமைகள்
என்று எங்கள் சகோதரிகளை
மானபங்கம் செய்தீர்கள்..
எங்களை ஒடுக்குங்கள்!
நாங்கள் பாவிகள்
என்று எங்கள் பாடசாலைகளையும்,
மருத்துமனைகளையும் அழித்தீர்கள்..
எங்களை ஒடுக்குங்கள்!
எங்களுக்குகாக போராடிய
போராளிகளின் இறந்த உடல்களை
அவமானம் செய்தீர்கள்..
எங்களை ஒடுக்குங்கள்!
ஓடிய கால்கள் ஒரு நாள் நிற்கும்,
ஊமையாய் இருக்கும் நாக்கு ஒரு நாள் உறுமும்,
பணிந்த கைகள் ஒரு நாள் சேரும்,
எங்கள் பலம் உமக்குத் தெரியும்
அது வரை நீங்கள் எங்களை ஒடுக்குங்கள்!!
2 comments:
Reverse hit to them. But it's required to them.
பணிந்த கைகள் ஒரு நாள் சேரும்,
எங்கள் பலம் உமக்குத் தெரியும்
.
Nadaka thaan poguthu..
Post a Comment