சிவா காலையில் செய்தித்தாளை புரட்டிக்கொண்டிருந்தான். அப்பொழுது அவனுடைய மனைவி லாவண்யா, காலையில் ஆவி பறக்க தேனீர் கொண்டுவந்து கொடுத்தாள். சூடான தேநீர் பருக சிவாவிற்கு பிடித்தமான ஒன்று. தேநீர் கோப்பையை கையில் ஏந்தி உதடுகளின் இடையே வைத்து மெல்ல சுவைத்து குடிக்கின்றான். அப்பொழுது வீட்டை யாரோ புதிதாக சுத்தம் செய்து கொண்டிருப்பதை உணர்ந்து அப்பக்கம் பார்வையை திருப்புகின்றான்.
அப்பொழுது சுத்தம் செய்து கொண்டிருப்பது ஒரு புது பணிப்பெண். அவள் பெயர் மீரா. மீரா குனிந்து சுத்தம் செய்யும் பொழுது தன்னுடைய தலைமுடியை ஒதுக்கினாள். அப்பொழுது சிவாவிற்கு அம்முகம் எங்கோ பார்த்த ஞாபகம்! அவளுடைய புடவை சில இடங்களில் கிழிந்திருந்தது. சிவா பார்ப்பதை மீராவும் கவனித்துவிட்டாள். விரைவில் அவ்விடத்தை விட்டு அகன்றாள். ஆனால் சிவாவின் நினைவுகளில்மீரா.
சிவா வேலைக்கு புறப்பட்டான். புறப்படும் முன் மூன்று அல்லது நான்கு முறை மீராவை சற்று உன்னிப்பாகவே நோக்கினான். அவளோ மிகவும் கூனி குருகிபோகின்றாள். விதி தன்னை துரத்துவதை விடவில்லை என்று உணர்ந்தாள். கணவனை இழந்து 7வயது பிள்ளையுடன் எப்படி இந்த உலகத்தில் உத்தமமாக வாழ்வது என்று நினைக்கும் பொழுது அவளுடைய நெஞ்சம் படபடத்தது. வேறு வழில்லை என்று லாவண்யாவிடம் தெரிவிக்கின்றாள். லாவண்யா தன் கணவன் அப்படியெல்லாம் தவறாக பார்க்க மாட்டார் என்று கூறி மீராவிற்கு தைரியம் கூறுகின்றாள். ஆனால் காலை முதல் நடந்ததை கூறும் பொழுது லாவண்யா மிகவும் அவமானப்பட்டாள்.
மாலை 6 மணிக்கு வரவேண்டிய சிவா 4 மணிக்கே வந்தது லாவண்யாவிற்கு சந்தேகத்தை மேலும் உறுதியாக்கியது. சிவா சோகத்துடன் நாற்காலியில் அமர்ந்தான். லாவண்யா மீராவை பற்றி சிவாவிடம் பேச்சை ஆரம்பிக்க முடிவு செய்து அவன் அருகில் செல்கின்றாள். அப்பொழுது சிவா மீரா மிகவும் துன்பப்படுதுவதாகவும், அவள் தன்னுடைய 7வயது மகனை படிக்க அனுப்பாமல் சிறிய வயதிலேயே வேலைக்கு அனுப்புவதாகவும் கூறினான். நேற்று வேலை முடித்து வரும் பொழுது அருகில் உள்ள ஒரு சிறிய பணிமனையில் ஒரு விதவைப் பெண் ஒரு சிறுவனை வேலைக்கு சேர்த்ததாகவும் அவள் தான் மீரா என்று கூறுகின்றான். காலையில் அவளை இங்கே பார்த்த பொழுது தான் மிகவும் வருந்துவதாகவும் தெரிவித்தான்.
காலையில் வேலைக்கு செல்லும் பொழுது மீராவின் மகன் காலில் காயம்பட்டு விட்டதாகவும், அதைப் பார்த்ததினால் தனக்கு வேளையில் நாட்டம் இல்லை என்றும் கூறினான். அப்பொழுது அவனுடைய முகத்தைப் பார்க்கின்றாள் லாவண்யா. சிவாவின் கண்கள் கலங்யிருந்ததை கவனித்தாள். ஒரு நிமிடத்தில் தன் கணவனை தவறாக நினைத்துவிட்டோமே என்று கலங்கி தன் கணவனின் நெஞ்சில் சாய்ந்த பொழுது அவளின் கண்கள் கண்ணீர் துளிகளை வழியவிட்டது. சமயலறையில் பாத்திரங்களை துலக்கும் மீராவும் அழுதாள்.
அப்பொழுது சுத்தம் செய்து கொண்டிருப்பது ஒரு புது பணிப்பெண். அவள் பெயர் மீரா. மீரா குனிந்து சுத்தம் செய்யும் பொழுது தன்னுடைய தலைமுடியை ஒதுக்கினாள். அப்பொழுது சிவாவிற்கு அம்முகம் எங்கோ பார்த்த ஞாபகம்! அவளுடைய புடவை சில இடங்களில் கிழிந்திருந்தது. சிவா பார்ப்பதை மீராவும் கவனித்துவிட்டாள். விரைவில் அவ்விடத்தை விட்டு அகன்றாள். ஆனால் சிவாவின் நினைவுகளில்மீரா.
சிவா வேலைக்கு புறப்பட்டான். புறப்படும் முன் மூன்று அல்லது நான்கு முறை மீராவை சற்று உன்னிப்பாகவே நோக்கினான். அவளோ மிகவும் கூனி குருகிபோகின்றாள். விதி தன்னை துரத்துவதை விடவில்லை என்று உணர்ந்தாள். கணவனை இழந்து 7வயது பிள்ளையுடன் எப்படி இந்த உலகத்தில் உத்தமமாக வாழ்வது என்று நினைக்கும் பொழுது அவளுடைய நெஞ்சம் படபடத்தது. வேறு வழில்லை என்று லாவண்யாவிடம் தெரிவிக்கின்றாள். லாவண்யா தன் கணவன் அப்படியெல்லாம் தவறாக பார்க்க மாட்டார் என்று கூறி மீராவிற்கு தைரியம் கூறுகின்றாள். ஆனால் காலை முதல் நடந்ததை கூறும் பொழுது லாவண்யா மிகவும் அவமானப்பட்டாள்.
மாலை 6 மணிக்கு வரவேண்டிய சிவா 4 மணிக்கே வந்தது லாவண்யாவிற்கு சந்தேகத்தை மேலும் உறுதியாக்கியது. சிவா சோகத்துடன் நாற்காலியில் அமர்ந்தான். லாவண்யா மீராவை பற்றி சிவாவிடம் பேச்சை ஆரம்பிக்க முடிவு செய்து அவன் அருகில் செல்கின்றாள். அப்பொழுது சிவா மீரா மிகவும் துன்பப்படுதுவதாகவும், அவள் தன்னுடைய 7வயது மகனை படிக்க அனுப்பாமல் சிறிய வயதிலேயே வேலைக்கு அனுப்புவதாகவும் கூறினான். நேற்று வேலை முடித்து வரும் பொழுது அருகில் உள்ள ஒரு சிறிய பணிமனையில் ஒரு விதவைப் பெண் ஒரு சிறுவனை வேலைக்கு சேர்த்ததாகவும் அவள் தான் மீரா என்று கூறுகின்றான். காலையில் அவளை இங்கே பார்த்த பொழுது தான் மிகவும் வருந்துவதாகவும் தெரிவித்தான்.
காலையில் வேலைக்கு செல்லும் பொழுது மீராவின் மகன் காலில் காயம்பட்டு விட்டதாகவும், அதைப் பார்த்ததினால் தனக்கு வேளையில் நாட்டம் இல்லை என்றும் கூறினான். அப்பொழுது அவனுடைய முகத்தைப் பார்க்கின்றாள் லாவண்யா. சிவாவின் கண்கள் கலங்யிருந்ததை கவனித்தாள். ஒரு நிமிடத்தில் தன் கணவனை தவறாக நினைத்துவிட்டோமே என்று கலங்கி தன் கணவனின் நெஞ்சில் சாய்ந்த பொழுது அவளின் கண்கள் கண்ணீர் துளிகளை வழியவிட்டது. சமயலறையில் பாத்திரங்களை துலக்கும் மீராவும் அழுதாள்.