
இந்த எழுத்துக்களில்
உள்ள இணைப்பு
நம் தமிழ்
மக்களிடம்
இல்லை!
மனங்கள்
ஏன் குறுகியது
என்ற
காரணம்
இன்றும் எனக்கு
விளங்கவில்லை!
தீராத பிரச்சனையும்
பேச்சு வார்த்தையில்
சுமுக முடிவிற்கு
வருகிறது,
ஆனால் பேசி
தீர்க்க அச்சம்!
கண்களால் மட்டுமல்ல
மனதால் அகலமாகவும்,
ஆழமாகவும்,
யோசித்தால்
வி(மு)டிவு
நம் கையில்.
2 comments:
அருமையான கருத்து எளிமையான நடையில்...
நன்றி தோழர் கார்த்திக் அவர்களே...
Post a Comment