Blogger news

இன்றைய குறள்

பழமொழி

Blogger templates

Sunday, October 2, 2011

தேர்தல் பற்றிய எண்ணம்.


வருடம்
ஒரு முறை
சட்டமன்ற நாடாளுமன்ற
தேர்தலும்,
நான்கு முறை
உள்ளாட்சி
தேர்தலும் நடந்தால்
போதும்,
எங்களைப் போல்
ஏழைகள் மகிழ்வார்கள்.

வரிசையில் கால் கடுக்க
நின்று எங்கள்
விரல்களில்
நாட்டின் தலைமையை
தேர்வு செய்த
அடையாளம் வைத்து
வெளியில்
வந்து பார்த்தால்,
வாக்குளை விலைக்கு வாங்க
எங்களுடைய வரிப்பணம்
விரையம் ஆகின்றது!
ஒன்றும் செய்யமுடியவில்லையே,
என்ற ஏக்கத்தோடு
எங்களைப் போல்
நடுத்தர மக்கள்.

யார் ஆட்சி
வந்தாலும் எங்கள்
பணம் மூலம்
தான் ஆட்சி
அரங்கேறும்
என்ற இறுமாப்பு
எங்களுக்கு எப்பொழுதும்
உண்டு.

வெளியில் அடித்துக்கொன்டாலும்
உள்ளுக்குளே சமரசம்
பேசி வைத்துக்கொண்டு,
ஆளுக்கு ஆயிரம்
என்று கள்ளவாக்குகளை
நாங்களே பிரித்துக்கொள்வோம்.
மேலிடம் கொடுக்கும்
பணத்தில் சிறிதளவு
பட்டுவாடா செய்துவிட்டு,
மீதியை முழுங்கும்
குட்டி தலைவர்கள் நாங்கள்.

யார் வெற்றி பெற்றாலும்
என்னால் தான்
வெற்றி பெற்றது
என்று மார் தட்டுவோம்
என்னை போன்ற தலைவர்கள்.

2 comments:

அருமை கார்த்திக் தம்பி என்ன நீங்கள் சொனால்லும் தலைவர்கள் அந்த கொடுமையன செயலை செய்து கொண்டு இருப்பார்கள்....தலைவர்கள் திருந்த மாட்டார்கள்

Post a Comment