Blogger news

இன்றைய குறள்

பழமொழி

Blogger templates

Monday, October 31, 2011

இன்றைய சிந்தனை

நன்மையையும் தீமையும் நம்முடைய எண்ணம் மற்றும் பார்வையில் தான் இருக்கிறது.

Monday, October 24, 2011

தீபஒளித்திருநாள்


நெஞ்சில் இருக்கும்
நஞ்சு நீங்கவும்,
பொறாமை பொசுங்கவும்,
அறியாமை எனும் காரிருள் அகலவும்,
பகுத்தறிவில் பாதை புலப்படவும்,
தீபத்தை நம்முள் ஏந்தி
மனித நேயம் காப்போம்.
இனிய தீபஒளித்திருநாள்
நல்வாழ்த்துக்கள்.

Sunday, October 23, 2011

நகைச்சுவை சித்திரம்

Tuesday, October 18, 2011

அவசரம்

சரியாக
நடை பழகாத
தவழும்
கால்கள்,
pre. kg
வகுப்பில்.............

Monday, October 17, 2011

தவறை கண்டு பிடியுங்கள்

நீங்கள் கண்டுபிடித்தால் பகிருங்கள். சுட்டிக்காட வேண்டாம். மற்றவர்களும் கண்டு பிடிக்கட்டும். நன்றி.

Sunday, October 16, 2011

சின்ன மத்தாபூக்கள் எரிகிறது.



எல்லா மக்களுக்கும்

பட்டாசுகள்

கொடுத்து மனமகிழ

வைத்து,

குழந்தை தொழிலாளர்களுக்கு

படிப்பை

எரித்துவிடுகிறது

கந்தகம்..

Thursday, October 13, 2011

இன்றைய சிந்தனை

தவறு செய்பவர்களை, அவர்களது வெட்கத்தால் தலை குனிய விட்டுவிடு.

சமீபத்தில் கண் கலங்க வைத்த பாடல்

படம்: வாகை சூட வா

படத்தின் இறுதி கட்டத்தில் வரும் பாடல் இது. இந்த பாடல் வெறும் சொற்ப வரிகள் தான். இதில் குழந்தை தொழிளாளர்கள் பாடம் கற்பது எங்கே வெறும் கனவாக மாறிவிடுமோ என்ற ஏக்கத்தில் எழுத்தியது போல் இருக்கும்.

மிக மிக அருமையான வரிகள்.


அக்கினி குஞ்சி ஒன்று கண்டேன்.. கண்டேன் எம்மாடி எம்மாடி
கை நாட்டு சிவகாமி கை எழுத்து ஆனாலே எம்மாடி எம்மாடி
அவ கால கடைசில கண் தெரிஞ்சிட்டோ எம்மாடி எம்மாடி

சூளையில கல்லு வேகையில சின்ன புள்ளையும் வேகனுமோ
சூளையில கல்லு வேகையில சின்ன புள்ளையும் வேகனுமோ

அவர் பள்ளிக்கு தான் போய் பாடம் படிப்பது இல்லைன்னு ஆகணுமா
அவர் பள்ளிக்கு தான் போய் பாடம் படிப்பது இல்லைன்னு ஆகணுமா

ஆதரவில்லாமல் "அ"ன்ன "ஆ"வண்ணா ஆத்துல போகனுமா
ஆதரவில்லாமல் "அ"ன்ன "ஆ"வண்ணா ஆத்துல போகனுமா

இந்த வேதனை பார்த்துட்டும் வீராப்பு மாறாம வீட்டிற்கு போகனுமா
அந்த சர்க்கார் வேலையும் பெத்தவன் ஆசையும் இல்லைன்னு ஆகணுமா

Wednesday, October 12, 2011

இன்றைய சிந்தனை



அழுது ஆயிரம் கொடுப்பதை விட,

இன்முகமாய் இல்லை என்று

சொல்வது சிறந்தது.............

Tuesday, October 11, 2011

நியாயம் வெல்லும், நீதி நிலைக்கும்: சி.பி.ஐ., ரெய்டு குறித்து கருணாநிதி


தலைவரே,
நிச்சயம்
நியாயம் வெல்லும்
நீதி நிலைக்கும்
இப்பொழுது
தீகாரில்
அடைந்து
இருப்பது போல.

அப்பாவி பொதுமக்களுக்கு
வரவேண்டிய
எல்லாம் முடங்கியது.

மின் பற்றாக்குறையை
நீக்க வழி செய்யாமல்
மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு
தொகுப்புரை,
ஈழ மக்களின்
மீது இன அழிப்பை நிறுத்த
உண்ணாவிரத நாடகம்
எழுதி, இயக்கி, நடித்து
"அடை மழை ஓய்ந்தாலும்
தூவானம் ஓய்வதில்லை"
என்று கூறினீர்கள்!
நிச்சயம்
நியாயம் வெல்லும், நீதி நிலைக்கும்!

சென்னை சங்கமம்,
அரசாங்க பணம் வீண்.
மக்களின் வயிற்றெரிச்சல்.
நிச்சயம்
நியாயம் வெல்லும், நீதி நிலைக்கும்!

அதிமுக ஆட்சியில் தான் சட்டம்-ஒழுங்கு மிகவும் சீர்குலைந்துள்ளதாக தேமுதிக தலைவர் விஜய்காந்தின் மனைவி பிரேமலதா


இந்தியாவின்
மூத்த
அரசியல் சாணக்கியர்
புதிய தத்துவம்
உதிர்க்கிறார்.....

தனது வாழ்க்கை
முழுவதும்
தமிழக மக்களுக்காக
அர்ப்பணித்தவர் இவர்.

தமிழக மக்களுக்காக,
களம் பல கண்டு,
சிறை பல சென்று,
தன் வாழ்க்கையை
தமிழக மக்களுக்காக
தொலைத்தவர்

இவர் கூறினால்
சரியாகத்தான் இருக்கும்

Monday, October 10, 2011

கல்லால் கட்டப்பட்ட கோட்டை தி.மு.க., : கருணாநிதி பேச்சு


hollow block கல்லாக இருக்க போகுது.
வெளி பார்வைக்கு தான் அவை பலமாக
தெரியும்.
ஒரு குத்து விட்டால் பொலபொலவென
கொட்டிவிடும்......

பார்த்துக்கொள்ளுங்கள்...

16

என்னிரண்டு பதினாறு வயது.

மொத்தத்தையும்
தொலைத்தேன்
உன்னை
பிரிந்து!!

ஒளியூட்டும் விழிகள்

விளக்குகள் அடைக்கப்பட்டு
இருக்கிறது வீட்டில்!



இருளிலும்
வெளிச்சம் தான்,
உன் கண்கள்
எனை காணும் வரை!!



தம்பி சஞ்சீவ்குமாருக்காக

பித்தன்..

உன்னால்,

கண்ணிலாதவன் உலகை காண்கிறான்,
ஊமை பாடுகிறான்,
செவிடன் கேட்கிறான்,
முடவன் புறப்பட்டு ஓடுகிறான்,
கையில்லாதவன் எழுதுகிறான்,

ஆனால்
நான் மட்டும்
பித்தனாய்
இதை கிறுக்கி
கொண்டு இருக்கிறேன்........

மகிழ்ச்சி...

உடல் சிலிர்த்து,
மனம் குளிர்ந்து,
ஆனந்த மழைத்துளிகள்
என்
முகத்தில்
வழிந்தோடுகிறது
ஆனந்த கண்ணீராய்....

Saturday, October 8, 2011

நான் ரசித்த ஒரு சித்திரம் (நக்கல்)

இது ஏற்க்கனவே நிறைய பேர் பார்த்திருப்பீர்கள்...நானும் பார்த்து இருக்கேன். மறந்திருக்கலாம். மீண்டும் இதோ...

ஒற்றுமை


இந்த எழுத்துக்களில்
உள்ள இணைப்பு
நம் தமிழ்
மக்களிடம்
இல்லை!

மனங்கள்
ஏன் குறுகியது
என்ற
காரணம்
இன்றும் எனக்கு
விளங்கவில்லை!

தீராத பிரச்சனையும்
பேச்சு வார்த்தையில்
சுமுக முடிவிற்கு
வருகிறது,
ஆனால் பேசி
தீர்க்க அச்சம்!

கண்களால் மட்டுமல்ல
மனதால் அகலமாகவும்,
ஆழமாகவும்,
யோசித்தால்
வி(மு)டிவு
நம் கையில்.

Friday, October 7, 2011

அன்பு தமிழா இணைந்து வா


படம்: எந்திரன்
பாடல்: புதிய மனிதா பூமிக்கு வா

அன்பு தமிழா இணைந்து வா.
அன்பு தமிழா இணைந்து வா.

பல்லாண்டு முன்னாலே பிறந்து
மூத்த குடிகளாகி
நாகரீகத்தில் வளர்ந்து
கலாச்சாரத்தில் விளங்கி
அழியாத புகழ்
திருக்குறளோடு
மடியாத வீரத்தோடு
சிறந்து விளங்கி
அடிமையாய் இருக்கும்
தமிழனை எழுப்பும் முயற்சி.

அன்பு தமிழா இணைந்து வா.
அன்பு தமிழா இணைந்து வா.
அன்பு தமிழா இணைந்து வா.

மொழியை மறந்தாய்
ஆங்கிலம் கற்றாய்
நாகாரீகம் என்று
கலாச்சாரத்தை தொலைத்தாய்
உனினத்துக்கு
உண்மையாயிரு
எந்த நாட்டிலிருந்தும்
உதவியாயிரு

என் தமிழா..என் தமிழா..என் தமிழா
என்னுயிர் தமிழா
என் தமிழா..என் தமிழா..என் தமிழா
என்னுயிர் தமிழா

மொழி என்பது இரண்டெழுத்து.
இனம் என்பது மூன்றெழுத்து.
தமிழன் என்பது நான்கெழுத்து.
உனக்கில்லை தலைஎழுத்து.
வீரம் துணிச்சல் குறைவு இல்லை.
ஒன்றாக இணைய மனமும் இல்லை.
பிரிந்து இருந்தும் பயனில்லை
வெற்றி நமக்கில்லை.

தமிழை மொழியாய் வைத்த
எல்லா மக்களும்
புத்தியை தீட்டுங்கள்.
இதோ இணையும்
என் தமிழன்.
இவன் புதியவன்.
இதோ இணையும்
என் தமிழன்.
இவன் புதியவன்.

எல்லாம் மறுப்பவன் நீ
உன் மொழியையும் மறக்கலாமா?
தமிழா நீ சொல்லு
உன் இனம் அடிமை இனமா?

அன்பு தமிழா இணைந்து வா.
அன்பு தமிழா இணைந்து வா.
அன்பு தமிழா இணைந்து வா.

தமிழே எங்கள் தாய்மொழி
அதுவே நமது உயிர்மொழி
ஏன் தேடுகிறோம் வேற்றுமொழி
நீ ஆங்கிலம் விட்டொழி.
நீயும் நானும் சொந்தங்களே
ஒன்றாய் பிறந்த உறவுகளே
கை கோர்ப்போம் தோழர்களே
வெற்றிபெறுவோம் வாருங்களே

தமிழா தமிழா பல மொழிகள்
கற்றாலும்
உன் அன்னை மொழி தமிழல்லவா

தமிழா தமிழா பன்நாட்டில்
இருந்தாலும்
உன்னினம் தமிழினம் அல்லவா

அன்பு தமிழா இணைந்து வா.
அன்பு தமிழா இணைந்து வா.
அன்பு தமிழா இணைந்து வா.

Tuesday, October 4, 2011

இனம்


மதம் என்ற மாயத்தில்
மதி இழக்கிறோம்.
சாதி என்ற சாயம்
பூசி வேறுபடுகிறோம்.
கட்சி என்ற கதர்
உடுத்தி அடித்துக்கொள்கிறோம்.
ரசிகன் என்ற போழுதுபோக்கில்
நம்மை தொலைக்கிறோம்.
நாடுகளில் பிரிந்திருந்து
கலாச்சாரத்தை உதறுகிறோம்.
மொழி என்ற உயிரை
இழந்து,
இனத்தை இழக்கிறோம்.

அடையாத்தை மீட்க
ஒன்றிணைந்து,
மொழியை வாழவைத்து
இனத்தை மீட்ப்போம்
காப்போம்.

காதலி தாலாட்டு....

கனவிலும்

நான்

உறங்குகிறேன்!

நீ

தாலாட்டுவதால்.

பேசும் விழிகள்


உன் கண்கள் பேசும் பொழுது,

என் எழுத்துக்கள் மறக்கின்றது.
என் உதடுகள் மௌனிக்கிறது.
என் கால்கள் நடைமறக்கிறது.
என் நாட்கள் உறைகிறது.

Monday, October 3, 2011

இணைத்தல்

உன் விரல்கள்

இணையத்தானோ

என்னமோ

என் விரல்கள்

பிரிந்தே இருந்தது!

Sunday, October 2, 2011

தேர்தல் பற்றிய எண்ணம்.


வருடம்
ஒரு முறை
சட்டமன்ற நாடாளுமன்ற
தேர்தலும்,
நான்கு முறை
உள்ளாட்சி
தேர்தலும் நடந்தால்
போதும்,
எங்களைப் போல்
ஏழைகள் மகிழ்வார்கள்.

வரிசையில் கால் கடுக்க
நின்று எங்கள்
விரல்களில்
நாட்டின் தலைமையை
தேர்வு செய்த
அடையாளம் வைத்து
வெளியில்
வந்து பார்த்தால்,
வாக்குளை விலைக்கு வாங்க
எங்களுடைய வரிப்பணம்
விரையம் ஆகின்றது!
ஒன்றும் செய்யமுடியவில்லையே,
என்ற ஏக்கத்தோடு
எங்களைப் போல்
நடுத்தர மக்கள்.

யார் ஆட்சி
வந்தாலும் எங்கள்
பணம் மூலம்
தான் ஆட்சி
அரங்கேறும்
என்ற இறுமாப்பு
எங்களுக்கு எப்பொழுதும்
உண்டு.

வெளியில் அடித்துக்கொன்டாலும்
உள்ளுக்குளே சமரசம்
பேசி வைத்துக்கொண்டு,
ஆளுக்கு ஆயிரம்
என்று கள்ளவாக்குகளை
நாங்களே பிரித்துக்கொள்வோம்.
மேலிடம் கொடுக்கும்
பணத்தில் சிறிதளவு
பட்டுவாடா செய்துவிட்டு,
மீதியை முழுங்கும்
குட்டி தலைவர்கள் நாங்கள்.

யார் வெற்றி பெற்றாலும்
என்னால் தான்
வெற்றி பெற்றது
என்று மார் தட்டுவோம்
என்னை போன்ற தலைவர்கள்.

Saturday, October 1, 2011

பூனையை கண்டுபிடியுங்கள்


மேலே இருக்கும் படத்தில் ஒரு பூனை இருக்கிறது. கண்டுபிடியுங்கள். கண்டுபிடித்தால் உங்கள் நண்பர்களுக்கு பரப்புங்கள்.