Blogger news

இன்றைய குறள்

பழமொழி

Blogger templates

Friday, June 3, 2011

என் அன்பு தங்கை ஜனனிக்கு...

இன்றும்,
என் கண்ணுக்குள்
சின்ன குழந்தையாகவே
இருக்கிறாய் நீ.

பள்ளிகூடத்தில் இருந்து
உன்னை வீட்டிற்கு
அழைத்து வர நான்
வரும் பொழுது
வகுப்பு வாசலையே
உற்று நோக்கும்
உன் கவலை தோய்ந்த
முகம் என்றும்
என் நினைவில்...

கடலூர்
வந்து
விடுமுறையை மகிழ்ச்சியாக
கழித்துவிட்டு
நெய்வேலி திரும்பும்
பொழுது, நீ வடித்த
கண்ணீர் துளிகள்
இன்றும்
என் நெஞ்சுக்குள்
பத்திரமாக
இருக்கிறது.

இப்பொழுது நினைக்கும்
பொழுது என்
கண்கள் தளும்புகின்றது.

நான் கடைக்கு போகும்
பொழுது அழுது அடம்
பிடிக்கும் உன்னை
உப்பு மூட்டை சுமந்து
சென்ற ஞாபகம்
இன்னமும் செழிப்பாக
என் ஆழ் மனதில்.

உன்னை அடித்ததற்காக
உன் இரண்டு அக்காவையும்
நான் அடித்து
உன் பெரியம்மாவிடம்
அடிவாங்கியது
இன்னும் நிழலாய் என் மனதில்.

நீ ஆசிரியை படிப்பிலும்
ஆங்கில படிப்பிலும்
தேர்ச்சி பெற்ற பொழுதும்
என் மனம் உற்சாகத்தில்
பறக்க தான் செய்கின்றது.

என்றும் அன்புடன்,
பாசமிக்க உன் அண்ணன்
கார்த்திக்

0 comments:

Post a Comment