Blogger news

இன்றைய குறள்

பழமொழி

Blogger templates

Friday, June 10, 2011

ஏனோ இன்று பாரமாய் இருக்கிறது (11-June-2011)

இது அனைவருக்கும் பொருந்துமா என்று எனக்கு தெரியவில்லை. என் மனம் மிகவும் வருத்தமாய் இருக்கிறது. நண்பர்களே கோபித்துக் கொள்ளவேண்டாம்..........

என்னுடைய அனுபவத்தை திருக்குறள் போல வடிவமைப்போம் என்று ஒரு சிந்தனை உருவானது. அது தான் கீழே எழுத்துக்களாய்:-

நட்பு அழகானதுதான் நண்பனுடன் பணம்
பரிமாற்றம் இல்லாத வரை.

நண்பன் அன்பானவணன் தான், அவன்
உன்னிடம் கடன்படாமல் இருக்கும்வரை.

கைகொடுப்பான் நண்பன், கொடுத்தேன்! கை
போனது தான் மிச்சம்.

சில நண்பர்களிடம் ஏற்பட்ட மனக்கசப்பு
நட்பை அகத்திலிருந்து நீக்கிவிடுமோ!

பல ஆண்டு பழக்கத்தை பணம்
பிரிக்கிறது சில நாட்களில்.


தினமும் தொடர்பிலிருக்கும் நண்பன், பணம்
பெற்றவுடன் தொடர்பில் இல்லை!

6 comments:

உண்மை நட்பு என்பது பணதிற்க்கு அப்பாற்பட்டது...

அப்படி என்றால் நீங்கள் உண்மையான நட்பை பற்றி எழுதவில்லை..

பணம் வாங்கிய உடன் ஓடிவிடுபவன் நண்பன் அல்ல... அவன் கடன் காரன்...

உங்களுக்கு அப்படி பட்டவர்கள் அதிகம் இருந்தால் உங்களுக்கு நல்ல நண்பர்களை தேர்ந்து எடுக்க தெரியவில்லை என்று தான் ஆர்ததம்...
உண்மை நம்பன் என்பவன் அதிகம் கவரமாட்டான்.. எளிதில் கண்ணுக்கு தெரிய மாட்டான்.

kaase than kadawul pa...kadawulukem athu teriyum pa...?????? frendzz vs money Who will Win

முதிகில் குத்திய பிறகு தான் அவர்களின் எண்ணம் தெரிகிறது, என்ன செய்வது? ஒரு மாதத்தில் தருவதாக பேசுவது, பொய் பேச மாட்டேன் என்று கூறுவது, இதெல்லாம் முன்பு நடக்கிறது. அது என்னமோ தெரியவில்லை பண பரிமாற்றத்திற்கு பிறகு எல்லாமே மாறிவிடுகிறது. இதனால் எனக்கு தான் இழப்பு, என்ன நிறைய பண விரையம் ஆகிவிட்டது. இனிமேல் மிக மிக மிக நல்ல நண்பனக்கு கூட பண உதவி செய்ய மனம் யோசிக்கிறது. யோசிக்காமல் கொடுத்த நான் இன்று யோசிக்கிறேன். இவர்களுக்கு நட்பு என்ற ஆயுதம் எங்கு இருந்து கிடைக்கிறது என்னை தாக்க என்று தான் தெரியவில்லை.

nanbare neegal varuthapada onndrum ellai ,neegal kooruvathu noorukku nooru unmai

நன்றி தோழி லக்க்ஷனா மற்றும் தோழர் ராஜசேகர் அவர்களே....

Post a Comment