Blogger news

இன்றைய குறள்

பழமொழி

Blogger templates

Tuesday, June 21, 2011

நீயே.......நீயே.....




என்னில் உன்னைப்
கண்டதால்
தினமும் கண்விழித்ததும்
கண்ணாடியை பார்க்கிறேன்!

நான் பகலிலும்
தூங்க ஆசைப்படுகிறேன்
கனவில்
நீ வருவாய் என!

நடை பயிற்சியின்
பொழுதும்
என் சிந்தனைகளை
நிறைக்கும் உன்
நினைவுகள்!

இரவில் வானத்தில்
உன் முகத்தை
பார்க்கிறேன்
பருக்களாய்
நட்சத்திரங்கள்!

Monday, June 20, 2011

ஆனந்தம்.............

நிஜத்தில்
உன்னிடம்
சொல்லமுடியாததை
தினமும்
உன்னிடம் சொல்லி
மகிழ்கிறேன்
என் கனவில்!

Tuesday, June 14, 2011

இது சரியா?



இதயத்தில்
கானல் நீர்
காதல்!
இணையத்தில்
கானல் நீர்!
மின் அரட்டை நண்பர்கள்!

Monday, June 13, 2011

அம்பான அன்புகள்......!

நட்பு என்ற வார்த்தையில்
என்னை நோக்கி நிறைய
அம்புகள்.
அன்பு என்று நினைத்த
எனக்கு
பரிசு
ரணங்கள் தான்.

Sunday, June 12, 2011

எனக்கு வந்த மின்னஞ்சல்

Politics Crore card:-

1. A.Raja - Caught & Bowled - CBI - 176,000 Crores
2. Kanimozhi - Caught & Bowled - CBI - 214 Crores
3. Dhayanithi Maran - Run out - CBI / Media - 440 Crores
4. Kalanidhi Maran (batting)
5. Azhagiri (batting)
6. Stalin
7. Udhayanidhi
8. Dhayanidhi
9. Rajaathi
10. Dayalu
11. Kalaignar

Innum Amma field set panni bowling ah start pannala... adhukullaye ovvoru wicket aa poguthey!

படித்த நகைச்சுவை - நன்றி சவுக்கு

அழகிரி: ஆமாம். குங்குமப்பூ போண்டா ன்னு ஒரு படம் ரிலீஸ் ஆகியிருக்காமே... போலாமா.... ?

தயாநிதி : அ்பபடி ஒரு படம் நான் கேள்விப் படவேயில்லையே....

அழகிரி : ஏய்.... என்னப்பா இப்டி சொல்ற ? அனிமேஷன் படமாம்பா... பிரமாதமா இருக்குமாம்..

தயாநிதி : (மனதுக்குள்) சனியன் புடிச்சவன். குங்ஃபூ பாண்டாவை குங்குமப்பூ போண்டான்றான் பண்ணாடை. இவன வச்சுக்கிட்டு என்ன பண்றது ?

Friday, June 10, 2011

ஏனோ இன்று பாரமாய் இருக்கிறது (11-June-2011)

இது அனைவருக்கும் பொருந்துமா என்று எனக்கு தெரியவில்லை. என் மனம் மிகவும் வருத்தமாய் இருக்கிறது. நண்பர்களே கோபித்துக் கொள்ளவேண்டாம்..........

என்னுடைய அனுபவத்தை திருக்குறள் போல வடிவமைப்போம் என்று ஒரு சிந்தனை உருவானது. அது தான் கீழே எழுத்துக்களாய்:-

நட்பு அழகானதுதான் நண்பனுடன் பணம்
பரிமாற்றம் இல்லாத வரை.

நண்பன் அன்பானவணன் தான், அவன்
உன்னிடம் கடன்படாமல் இருக்கும்வரை.

கைகொடுப்பான் நண்பன், கொடுத்தேன்! கை
போனது தான் மிச்சம்.

சில நண்பர்களிடம் ஏற்பட்ட மனக்கசப்பு
நட்பை அகத்திலிருந்து நீக்கிவிடுமோ!

பல ஆண்டு பழக்கத்தை பணம்
பிரிக்கிறது சில நாட்களில்.


தினமும் தொடர்பிலிருக்கும் நண்பன், பணம்
பெற்றவுடன் தொடர்பில் இல்லை!

Friday, June 3, 2011

என் அன்பு தங்கை ஜனனிக்கு...

இன்றும்,
என் கண்ணுக்குள்
சின்ன குழந்தையாகவே
இருக்கிறாய் நீ.

பள்ளிகூடத்தில் இருந்து
உன்னை வீட்டிற்கு
அழைத்து வர நான்
வரும் பொழுது
வகுப்பு வாசலையே
உற்று நோக்கும்
உன் கவலை தோய்ந்த
முகம் என்றும்
என் நினைவில்...

கடலூர்
வந்து
விடுமுறையை மகிழ்ச்சியாக
கழித்துவிட்டு
நெய்வேலி திரும்பும்
பொழுது, நீ வடித்த
கண்ணீர் துளிகள்
இன்றும்
என் நெஞ்சுக்குள்
பத்திரமாக
இருக்கிறது.

இப்பொழுது நினைக்கும்
பொழுது என்
கண்கள் தளும்புகின்றது.

நான் கடைக்கு போகும்
பொழுது அழுது அடம்
பிடிக்கும் உன்னை
உப்பு மூட்டை சுமந்து
சென்ற ஞாபகம்
இன்னமும் செழிப்பாக
என் ஆழ் மனதில்.

உன்னை அடித்ததற்காக
உன் இரண்டு அக்காவையும்
நான் அடித்து
உன் பெரியம்மாவிடம்
அடிவாங்கியது
இன்னும் நிழலாய் என் மனதில்.

நீ ஆசிரியை படிப்பிலும்
ஆங்கில படிப்பிலும்
தேர்ச்சி பெற்ற பொழுதும்
என் மனம் உற்சாகத்தில்
பறக்க தான் செய்கின்றது.

என்றும் அன்புடன்,
பாசமிக்க உன் அண்ணன்
கார்த்திக்

மேகம் கொட்டட்டும்......

எங்கள்
உறவுகளின் துன்பங்களுக்கு
நாங்கள் அழுது நடத்தும்
போராட்டத்திற்கு
மேகமும்
ஆதரவு தருகிறது.
ஆம் அதுவும்
அழுகிறது.
எங்கள் கூட்டத்தில் மழை.