தூக்கு தண்டனை ரத்து
செய்ய போராடும்
அனைத்து தமிழர்களும்
தேசத்துரோகிகள்.....
ஆம்
நாங்கள் தேசத்துரோகிகள் தான்!!

கேரளா அரசாங்கம்,
பெரியார் அணையின்
நீர் மட்டத்தை
உயர்த்த முடியாது என்று
கூற, வாய் மூடி
இருக்கிறோமே
நாங்கள் தேசத்துரோகிகள் தான்!!
கர்நாடக அரசாங்கம்,
ஹோகேனக்களில் தண்ணீர்
எடுக்கக்கூடாது
என்று கூறக்கேட்டு
அமைதி காக்கும்
நாங்கள் தேசத்துரோகிகள் தான்!!
ஆந்திர அரசாங்கம்,
பாலாறு நதியில்
அணை கட்டுவதை
தடுக்க முடியாமல்
வேடிக்கை பார்க்கிறோமே
நாங்கள் தேசத்துரோகிகள் தான்!!
எங்கள் நெய்வேலியில்
கடினப்பட்டு உற்பத்தி
செய்யும் மின்சாரத்தை
இந்த மாநிலங்களுக்கு
கொடுத்து உதவும்
நாங்கள் தேசத்துரோகிகள் தான்!!
இந்திய சுதந்திர நாளில்,
மூவர்ண கொடியை
வீட்டிலும் நெஞ்சிலும்
சுமந்து திரிகிறோமே
நாங்கள் தேசத்துரோகிகள் தான்!!
கார்கில் சமரில்
போராடியவர்களுக்கான
நிதி வழங்குதலிலும்,
குஜராத் பூகம்பத்தில்
பாதிக்கப்பட்டவர்களுக்கு
நிதி வழங்குததில்லும்
இந்தியாவிலேயே
அதிக நிதி வழங்கிய
நாங்கள் தேசத்துரோகிகள் தான்!!
0 comments:
Post a Comment