வறுமை கோட்டிற்கு கீழ்
கோடிகணக்கில் ஏழைகள்.
உயிருள்ள
அவர்களின் சிரிப்பில்

இறைவனை காண்பதை
விட , திருப்பதி கோவிலுக்கு
வெள்ளிக்கதவு மிக
முக்கியமா?
வறுமையை ஒழிக்காமல்,
எத்தனை யாகம்
செய்தாலும், அவை
புகையாகி ஒருவருக்கும்
பயனில்லாமல் போய்விடும்.
உண்டியலில் கொட்டும்
சில்லறைகளை ஏழைகளின்
வயற்றிற்கு உணவாக மாற்றுங்கள்,
வறுமையில் வாடும் குழந்தைகளுக்கு
கல்வியாக மாற்றுங்கள்,
வறுமை ஒழிய வாய்ப்பு இருக்கு.
உண்மையாக
உங்கள் மனம் உருகும்.
0 comments:
Post a Comment