Blogger news

இன்றைய குறள்

பழமொழி

Blogger templates

Wednesday, January 25, 2012

பாரம்.


என்னை போலவே
இந்த தாள்களும்
பாரமாகிறது.




உன் நினைவுகளை
சுமப்பதால்.

நடுகடலுல கப்பலை - அட்டகத்தி

நடுகடலுல கப்பலை இறங்கி தள்ள முடியுமா? ஒரு தலையா காதலிச்சா வெல்ல முடியுமா?
நடுகடலுல கப்பலை இறங்கி தள்ள முடியுமா? ஒரு தலையா காதலிச்சா வெல்ல முடியுமா?
பிறந்த பின்னே கருவறைக்குள் செல்ல முடியுமா?
பெண்கள் மனதில் உள்ள ரகசியத்தை சொல்ல முடியுமா?
பெண்கள் மனதில் உள்ள ரகசியத்தை சொல்ல முடியுமா?

முடியாத காரியங்கள் நிறைய இருக்குதாம்
அழியாத அனுபவங்கள் அதுல கிடைக்குதாம்

நடுகடலுல கப்பலை இறங்கி தள்ள முடியுமா? ஒரு தலையா காதலிச்சா வெல்ல முடியுமா?

உல்லாச வாழ்க்கையில் பணத்த சேர்க்க முடியுமா? ஊதாரியாக வாழ்ந்தா குடும்பம் நடத்த முடியுமா?
உல்லாச வாழ்க்கையில் பணத்த சேர்க்க முடியுமா? ஊதாரியாக வாழ்ந்தா குடும்பம் நடத்த முடியுமா?
கடற்கரையில காதலரை எண்ண முடியுமா? வரும் கனவுகளை ஒளிப்பதிவு பண்ண முடியுமா?
கண்ணால பாத்த பிகரை சொந்தமாக்க முடியுமா?
கண்ணால பாத்த பிகரை சொந்தமாக்க முடியுமா?
பின்னால நடப்பத தான் இப்போ சொல்ல முடியுமா?

நடுகடலுல கப்பலை இறங்கி தள்ள முடியுமா? ஒரு தலையா காதலிச்சா வெல்ல முடியுமா?
நடுகடலுல கப்பலை இறங்கி தள்ள முடியுமா? ஒரு தலையா காதலிச்சா வெல்ல முடியுமா?
பிறந்த பின்னே கருவறைக்குள் செல்ல முடியுமா?
பெண்கள் மனதில் உள்ள ரகசியத்தை சொல்ல முடியுமா?
பெண்கள் மனதில் உள்ள ரகசியத்தை சொல்ல முடியுமா?

Tuesday, January 24, 2012

ஆடி போனா ஆவனி - அட்டகத்தி

பாடியவர்: கானா பாலா
இசை: சந்தோஷ் நராயணன்

ஆடிபோனா ஆவணி, அவ ஆளை மயக்கும் தாவணி
ஆடிபோனா ஆவணி, அவ ஆளை மயக்கும் தாவணி
கண்ணால பாத்தா போதும் நான்தான் கலைமாமணி

ஆடிபோனா ஆவணி, அவ ஆளை மயக்கும் தாவணி
ஆடிபோனா ஆவணி, அவ ஆளை மயக்கும் தாவணி
பாம்பாக பல்ல காட்டி கொத்துரா,
அவ பாவாடை ராட்டினமா வந்து சுத்துரா
பாம்பாக பல்ல காட்டி கொத்துரா,
அவ பாவாடை ராட்டினமாக சுத்துரா
ஆடி போனா...
ஆடிபோனா ஆவணி, அவ ஆளை மயக்கும் தாவணி
ஆடிபோனா ஆவணி, அவ ஆளை மயக்கும் தாவணி

வத்திக்குச்சி இடுப்பத்தான் ஆட்டி
நெஞ்சுக்குள்ள அடுப்பத்தான் முட்டி
ஐயோ அம்மா என்னை இவ வாட்டி வதைக்குரா
முட்டை முட்டை முழியதான் காட்டி
முன்ன பின்ன ரட்ட ஜடை ஆட்டி
மல்லிக பூ வாசமே காட்டி மயக்குரா
தரையில் தூக்கி போட்டால் என் காதல் கொரவ மீனா வாழும்
தரையில் தூக்கி போட்டால் என் காதல் கொரவ மீனா வாழும்
வாயேன்டி கேடி நீயில்லை ஜோடி வாலில்லா காத்தாடி

ஆடிபோனா ஆவணி, அவ ஆளை மயக்கும் தாவணி
ஆடிபோனா ஆவணி, அவ ஆளை மயக்கும் தாவணி

உன்னால நான் வானுக்கு பறந்தேன்
உன்னால நான் நேரத்தில் எழுந்தேன்
உன்னால நான் தூக்கத்தில் கூட சிரிக்கிறேன்
வால் நண்டா இருந்தவன் நானே
கற்கண்டு பார்வை பார்த்தாய்
வாழா நண்டாய் சீறி நின்றேன் உன்னாலே
சேர்ந்து வாழும் காலம் அடிக்கவா மாட்டு தோலு மேளம்
சேர்ந்து வாழும் காலம் அடிக்கவா மாட்டு தோலு மேளம்
வாயேண்டி கேடி நீ இல்ல ஜோடி, வால் இல்லா காத்தாடி

ஆடி போனா...
ஆடி போனா ஆவனி அவ ஆள மயக்கும் தாவனி
ஆடி போனா ஆவனி அவ ஆள மயக்கும் தாவனி
கண்ணால பாத்தா போதும் நான் தான் கலைமாமணி
ஆடி போனா ஆவனி அவ ஆள மயக்கும் தாவனி
ஆடி போனா ஆவனி அவ ஆள மயக்கும் தாவனி

பாம்பாக பல்ல காட்டி கொத்துரா
பாவாடை ராட்டினமா வந்து சுத்துரா
பாவாடை ராட்டினமா வந்து சுத்துரா
ஆடி போனா...
ஆடி போனா ஆவனி அவ ஆள மயக்கும் தாவனி
ஆடி போனா ஆவனி அவ ஆள மயக்கும் தாவனி


Sunday, January 22, 2012

என்று தணியும்?!?!?!?



சுதந்திர கொடியோடு,
தெருவில்
குழந்தை தொழிலாளியாக
சுதந்திரம் பறிபோய்,
தன்னிலை மறந்து
புன்னகையோடு
.

Tuesday, January 17, 2012

நட்சத்திர பூக்கள்


பறிக்க யாருமில்லாததால்
அவ்வப்பொழுது
தானாக
உதிர்கிறது
நட்சத்திர பூக்கள்

Friday, January 13, 2012

தை மகளே வருக வருக





இல்லாமை

இயலாமை

பொறாமை

கல்லாமை

அறியாமை

தீண்டாமை




இந்த ஆமைகளை

போகி பண்டிகையில்

அகத்தில் இருந்து நீக்கி,

புது பொலிவுடன்

தமிழர் திருநாளாம்

பொங்கலில்

தமிழ் புத்தாண்டோடு மனம் மகிழ்வோம்.



தை பிறந்தால் வழி பிறக்கும்.



தை மகளை அன்புடன் வரவேற்று

பொங்கல் பண்டிகையை அகமகிழ்வோடு கொண்டாடுவோம்.



உலக தமிழர்களுக்கு தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

Thursday, January 12, 2012

மதுரனந்தபுரம் - கி.பி. 2212 [படித்ததும் மனம் வலித்தது]

மதுரனந்தபுரம் - கி.பி. 2212

நண்பன் கிருஷின் வற்புறுத்தலால் இந்தியா செல்லும் சுற்றுப் பயணத்திற்கு சம்மதித்தான் மூர். அவர்களது குடும்பம் அமெரிக்காவில் குடியேறி நான்கைந்து தலைமுறைகளைக் கடந்துவிட்டது. தாத்தா என்றால் அத்தனை பிரியம் மூருக்கு. அவர் இறந்து பல வருடங்கள் கடந்துவிட்டாலும், இப்போது இந்திய சுற்றுப் பயணத்திற்கு சம்மதித்தது கூட தாத்தா பாசத்தால் தான். ஒரு தடவையாவது இந்தியாவையும் குறிப்பாக தமிழகத்தையும் தனது மூதாதையர்கள் வாழ்ந்த ஊர்களையும் பார்க்கவேண்டும் என ஆசைப்பட்டார். அவரால் ஆசைதான் பட முடிந்ததே தவிர, அதை செயல்படுத்த முடியவில்லை. எனவே அவர் ஆசைப்பட்டு, செல்ல முடியாத ஒரு இடத்திற்கு தான் போகப் போகிறோம் என நினைத்து சந்தோஷப்பட்டான் மூர்.

பயணத்திற்குத் தேவையானவற்றை எடுத்துவைக்கும்போது தாத்தவுடைய "டூரிஸ்ட் ப்லேசஸ் இன் இண்டியா" புத்தகதையும் எடுத்துக் கொண்டான். லீவ் அப்ரூவாகி, டிக்கெட் புக் செய்து, ஒருவழியாக இந்தியா வந்தே விட்டார்கள் இருவரும். டெல்லி விமான நிலையத்தில் இறங்கிய அந்த நொடி தாத்தவைத்தான் நினைத்துக் கொண்டான் மூர்.

வடஇந்தியாவில் பல இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு டெல்லியில் டெண்ட் அடித்தார்கள். ஓரிரு நாட்களில் தென்னிந்தியா செல்ல திட்டமிட்டார்கள்.

"மூர், கண்டிப்பா ஆந்திரா போகணும். அங்க திருப்பதின்னு ஒரு பில்க்ரிமேஜ் சென்டர் இருக்காம். அங்கே லட்டுன்னு ஒன்னு தருவாங்களாம். செம டேஸ்ட்டா இருக்கும்னு எங்க தாத்தா சொல்லியிருக்கார். முந்தியெல்லாம் அங்க வர்ற எல்லாருக்கும் 2 லட்டு குடுப்பாங்கன்னு எங்க தாத்தாவுக்கு அவங்க தாத்தா சொல்லியிருக்காராம். இப்போ அங்க வர்ற லோக்கல் பீப்பிளுக்கு லட்டே கிடையாதாம். ஒன்லி எக்ஸ்போர்ட் மட்டும் பண்றாங்களாம். பட், ஃபாரினர்ஸ் கோட்டா-ல நமக்கு குடுப்பாங்க. ஒரு பாஸ்போர்ட்டுக்கு 1 லட்டு", என்றான் கிருஷ்.

மூருக்கு லட்டின் மீது எல்லாம் ஆர்வம் அதிகமில்லை. அவனது எண்ணமெல்லாம் தமிழ்நாட்டுக்குப் போக வேண்டும் என்பதே. "சரி. போகலாம். அதை முடிச்சுட்டு கண்டிப்பா தமிழ்நாட்டுக்கு ஒரு விசிட் போடணும்" என்றான். "ஒன்னு பண்ணலாம். ரிட்டன் டிக்கெட் மும்பை-ல இருந்து போட்டிருக்கோம். ஸோ "கேப் காமரின்" (Cape Comorin) போயிட்டு, அங்க இருந்து ஒவ்வொரு இடமா பாத்துக்கிட்டே வந்து, திருப்பதியும் பாப்போம். அப்பறம், மஹாராஷ்டிரா வழியா மும்பை வந்துடுவோம்" என்றான் கிருஷ்.

ஓ.கே. தாத்தா புக்-ல பாத்தேன். மதுரைன்னு ஒரு ப்லேஸ் இருக்கு. அங்க இருந்து கேப் காமரின் பக்கத்துல தான். நான் அந்த மதுரைக்கு ப்ளைட் டைமிங் பாக்கறேன் என்றான். இன்டர்நெட்டில் எவ்வளவு தேடியும் அவனால் மதுரை செல்லும் ப்ளைட்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியாக ஒரு ஏர்-லைன்ஸ் நிறுவனத்தின் கால்-சென்டர் நம்பரைத் தொடர்பு கொண்டான்.

பதிவு செய்யப்பட்ட கம்ப்யூட்டர் குரல் பேசியது. "தேங்க்ஸ் ஃபார் யூசிங் அவர் கால்-சென்டர் சர்வீஸ். வாட் இன்பர்மேஷன் டூ யூ நீட்?" என்று கேட்டது. ஐ நீட் ஃப்ளைட் டைமிங்ஸ் ஃப்ரம் டெல்லி டூ மதுரை? என்றான். "சாரி நோ ஸச் டெஸ்டினேஷன்" (அப்படி ஒரு இடம் இல்லை) என்று பதில் வந்தது. வாய்ஸ் ரெக்கனைஸ் சிஸ்டம் சரியில்லையோ என நினைத்து மீண்டும், ஐ ரிப்பீட், ஃப்ளைட் டைமிங்ஸ் ஃப்ரம் டெல்லி டூ மதுரை என்றான். "சாரி நோ ஸச் டெஸ்டினேஷன்". அதே பதில். மே ஐ ஸ்பீக் டூ ஏஜன்ட்? என்றான். வழக்கம் போல "ப்ளீஸ் வெயிட். யுவர் கால் வில் பீ ஆன்ஸர்டு ஷார்ட்லி" என பதில் வந்தது. சில நிமிடக் காத்திருப்புக்குப் பின், ஒரு பெண் குரல் "ஹலோ திஸ் இஸ் அஷ்வினி குப்தா. ஹவ் குட் ஐ ஹெல்ப் யூ?" என்றது.

ஹை, திஸ் இஸ் மூர். டெல்லி டூ மதுரை ஃப்ளைட் டைமிங்ஸ் வேண்டும் என்றான். கம்ப்யூட்டர் சொன்ன அதே பதில் தான் வந்தது. அந்த விமான நிலையத்தின் குறியீடு (Airport Code) தெரியுமா எனக் கேட்டாள். IXM என்றான் மூர். அந்த விமான நிலையத்தின் பெயர் "மதுரனந்தபுரம்" எனக் கூறி, அங்கு செல்லும் விமானங்களின் நேரத்தையும் சொன்னாள்.

"நோ. அந்த ஊரின் பெயர் மதுரை தான்" என்றான் மூர். "நீங்கள் சொல்லும் அந்த ஊர் திருச்சினஹள்ளிக்கு பக்கத்தில் உள்ளது தானே?" எனக் கேட்டாள். திருச்சினஹள்ளி-யா? அது திருச்சிராப்பள்ளி (அ) திருச்சி தானே? ஏன் இப்படி எல்லா ஊர் பெயர்களையும் மாற்றிச் சொல்லிக் குழப்புகிறீர்கள்? ஐ வில் ரிப்போர்ட் திஸ் டூ யுவர் ஹையர் அஃபிஷியல்ஸ் என்றான். "நீங்கள் தான் சார் குழம்பியுள்ளீர்கள். வேண்டுமானால் இப்போதுள்ள மேப் (வரைபடம்) எடுத்துப் பாருங்கள் என்றாள்.

உடனே லேப்-டாப்பினான். அவள் சொன்னபடி தான் கொடுத்திருந்தார்கள். மூர் இப்போது தான் குழம்ப ஆரம்பித்தான். மீண்டும் "மதுரை" எனத் தேடினான். விக்கிபீடியாவில் "மதுரனந்தபுரம்" குறித்த பக்கங்கள் வந்தது. அதில் மதுரனந்தபுரத்தின் பெயர், சில நூற்றாண்டுகளுக்கு முன்பு மதுரை என இருந்தது எனக் குறிப்பிட்டிருந்தார்கள்.

அப்போது தான் அவன் கவனித்தான், "மதுரனந்தபுரம், கேரளா God's Own Country" எனக் கொடுத்திருந்தது அதிர்ச்சியாக இருந்தது. இந்திய வரைபடத்தை முழுமையாக டவுன்லோடினான். தமிழ்நாடு என்ற ஒன்றே இல்லை. தென்னிந்தியாவில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மட்டுமே இருந்தது. "வாட்ட்ட்??? திஸ் இஸ் அன்பீலவபிள்" என தனக்குத் தானே கூறிக் கொண்டான்.

தாத்தாவின் புத்தகத்திலிருந்த மேப்பையும் இதையும் ஒப்பிட்டுப் பார்த்தான். கேரளா எல்லை மிகப் பெரியதாகி இருந்தது இப்போதிருக்கும் மேப்பில். பழைய மேப்பில் இருந்த மதுரை, தேனி, கம்பம், கூடலூர் போன்ற ஊர்கள், இப்போது மதுரனந்தபுரம், தேனீக்கரா, கம்பத்துப்புழா, கூடக்கரா எனப் பெயர் பெற்று, கேரள மாநிலமாக இருந்தது. முக்கியமாக எந்தெந்த கிராமங்கள் "பட்டி"யில் முடிந்தோ, அந்த ஊர் பெயர்கள் கண்டிப்பாக மாற்றப்பட்டிருந்தன.

கொஞ்சம் மேலே வந்தால், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் எல்லாம், திருச்சினஹள்ளி, தஞ்சனஹள்ளி என்ற பெயர்களுடன் கர்நாடக மாநிலமாக இருந்தது. தமிழகத்தின் தலைநகரமாக இருந்த சென்னை சென்ஹராபாத் என்றும், வேலூர், வேலுவாடா என்ற பெயர்களுடன் ஆந்திர எல்லைக்குள் இருந்தது.

எந்தந்த மாநிலங்களில் இருந்து தண்ணீர் பெறப்பட்டதோ, அந்த தண்ணீரைப் பயன்படுத்திய தமிழகப் பகுதிகள் அந்தந்த மாநிலங்களுடன் இணைக்கப்பட்டிருந்தன. அந்த அடிப்படையில் தான் ஒப்பந்தங்களே போடப்பட்டிருந்தன. 999 வருடங்களுக்கு. இந்தத் தகவல்களை கூகிள் ஆர்கைவிலிருந்து(Archive) தெரிந்துகொண்டான். அங்கு வாழ்ந்து வந்த தமிழர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறினர். அல்லது வெளியேற்றப்பட்டனர் என்ற தகவல் ஆர்கைவிலிருந்து டெலீட்டப்பட்டது அவனுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

சரி. நம் மூதாதையர்கள் வாழ்ந்த ஊரின் பெயர் தான் மாறியிருக்கிறதே தவிர, ஊர் இருக்கிறது. அதையாவது போய்ப் பார்க்க வேண்டும் என நினைத்தான்.

"ஹலோ Mr.மூர், ஆர் யூ ஹியரிங் மீ?" எனக் கேட்டாள் அஷ்வினி. அப்போது தான் அவனுக்கு அந்த ஞாபகமே வந்தது. "யா. சாரி. வேறு ஏதோ நினைத்துக் கொண்டிருந்தேன். குட் யூ ப்ளாக் 2 டிக்கெட்ஸ் டூ மதுரனந்தபுரம்?" என்றான்.

"யுவர் பாஸ்போர்ட் நம்பர் ப்ளீஸ்" என்றாள். சொன்னான்.

கம்ப்யூட்டரில் தகவல்களைப் பார்த்தபடியே, சாரி சார். யுவர் ஃபேமிலி நேம் இஸ் நாட் "நாயர்". உங்கள் முழுப் பெயர் "மூர்த்தி அதியமான்" என உள்ளது. நீங்கள் தமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கிறேன். அது தமிழர்களுக்கு தடை செய்யப்பட்ட பகுதி. நீங்கள் அங்கு செல்ல முடியாது. வீ இண்டியன்ஸ் ஆர் அல்சோ நாட் பெர்மிட்டட் டு டாக் வித் ஸச் பீப்பிள், எனக் கூறி இணைப்பைத் துண்டித்துவிட்டாள்.

தங்கள் இனம் புலம் பெயர்ந்ததற்கான காரணம் கொஞ்சம் புரிந்தது போல இருந்தது அவனுக்கு...

(இக்கதை இனையத்தில் படித்தது, என் இதயத்தில் வலித்தது)
(தமிழர்களே படியுங்கள், தன் மானத்தோடு வாழுங்கள்)



உதடுகள் மௌனித்திருந்தாலும்...கண்கள் கதறுகின்றன...

Monday, January 9, 2012

தமிழ் என்ற சொல்லிலே உயிரும் கரையுதே



மிக சிறப்பாக பாடி கொடுத்த BTC சகோதரி கிருபா அவர்களுக்கும், காணொளியாக வடிவம் கொடுத்த BTC தோழர் உமாபதி அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.

Sunday, January 8, 2012

தோள் சாய்ந்த நேரம்



அனைத்து சோகமும்
மறைந்து
போனது
உன் தோள்
சாய்ந்த நேரத்தில்.

வாழ்க்கை முழுவதும் உன் நட்பு கிடைத்தால்?

மடியும் முன்


தமில்லா
றத்தமிழ்
க்கள்

கிழ்ந்து
தித்து வாழ்ந்த
னிதத்தை
றந்து,
தப்பித்தனாய்
ங்கி,
றுவி,
றத்து போய்,
ற்றவரை பார்த்து
லைத்து,
ண்டியிட்டு,
டிந்து
றையபோகிறோம்.


மடியும் முன்
மொழியை போற்றுவோம்
இனத்தை காப்போம்.

Friday, January 6, 2012

மனம்


இறுப்பிடம் இல்லையென்றாலும்,
மனம் இருந்தால்
போதும்
கல்வி
கொடுக்க முடியும் என
எண்ணி,
உன் குழந்தையை
நிறைய போராட்டங்கள்
நடுவே
பள்ளிக்கு
அனுப்பும்
நீயும்
வீர தமிழச்சி தான்.

வாழ்வில் நீயும்
கல்வியில் உன் மகளும்
வெற்றியடைய மனதார வாழ்த்துகிறேன்

Thursday, January 5, 2012

நிஜமில்லை

காலையில் மேற்கு நோக்கி,
பள்ளியிருக்கும் திசையில் விரைந்தேன்,
அன்றும் என்னை விட வளர்ச்சியாக
என் முன்னால் அவன்!
வேகமாக துரத்தினேன், என்னை விட
விரைவாக அவன், என் முன்னால்.
மாலையும் இதே.
மதியம் கவனித்தால் பெட்டிப்பாம்பாய்
என் காலடியில் சிறுவனாய்.
மரத்தடியில் சொல்லிக்கொள்ளாமல் மறைந்தான்.
இரவு விளக்குவீதிகளில் நாலைப்புறமும் திரிந்தான்.
தடுக்கி விழுந்த பொழுது அவன் மீதே விழுந்தேன்.
முழங்காலில் பட்ட காயத்தால் தாங்கி நடக்கிறேன்
அவனும் அப்படியே!!!!


அவனே என் நிழல்....

முல்லை பெரியாரும் நெய்யாரும் - படித்தது


குறைந்தஅதி சிறந்த
15.12.2011 அன்று கூடிய தமிழ்நாடு சிறப்புச் சட்டமன்றம், வரலாற்றுச் சிறப்புமிக்க சில தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தீர்மானத்தை முன்மொழிய, தி.மு.கழக சட்டமன்றக் கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்பட அனைத்துக் கட்சியினரும் அதனை வழிமொழிந்து நிறைவேற்றியுள்ளனர். முன்பு ஒருமுறை காவிரிப் பிரச்சினையில் இப்படி ஒரு சிறப்புச் சட்டமன்றம் கூட்டப்பட்டு, ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழக கட்சிகள் அனைத்தும் ஒரே வரிசையில் நின்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இருப்பது இப்போதுதான்.

தமிழர்களின் நலன் கருதித் தமிழக அரசு மேற்கொள்ளும் எல்லா நடவடிக்கைகளுக்கும் தி.மு.கழகம் துணை நிற்கும் என்று சட்டமன்றத்தில் மு.க. ஸ்டாலின் பேசியுள்ள பேச்சு, மிகுந்த நம்பிக்கையை அளிப்பதாக உள்ளது. 1965 இல் இந்தி எதிர்ப்புப் போராட்டம், 1983இல் ஈழ ஆதரவுப் போராட்டத்துக்குப் பிறகு, மக்களே தன்னெழுச்சியாகத் தெருக்களில் இறங்கிப் போராட வந்திருப்பதும் இப்போதுதான் மறுபடியும் நடைபெறுகிறது.

எனினும், மனித நேயமற்ற முறையில் கேரள அரசும், கேரளத்தில் உள்ள சில இனவாதக் குழுவினரும் அங்கே கட்டவிழ்த்து விட்டிருக்கும் வன்முறை மிகக் கொடியதாக உள்ளது. இடுக்கிப் பகுதியிலிருந்து தமிழர்கள் பலர் அகதிகளாக அடித்துத் துரத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக, கூலி வேலை பார்க்கும் ஏழைத் தொழிலாளர்களும், பெண்களும் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்கள் குமுறி அழும் காட்சிகளைத் தொலைக் காட்சிகளில் காணப் பொறுக்கவில்லை.

அமைதியாக இருந்த தமிழகத்திலும் இரண்டு விதங்களில் இப்போது எதிர்வினை தொடங்கியுள்ளது. கேரளப் பண முதலைகளின் நகைக்கடைகள் போன்றவை அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. கம்பம், தேனி பகுதிகளில் மட்டுமில்லாமல், மதுரை, ஈரோடு, கோவை,சென்னை ஆகிய மாநகரங் களிலும் தமிழர்களின் சீற்றத்தையும், சின அலைகளையும் காணமுடிகிறது. தண்ணீர் தர மறுக்கும் கேரளாவிற்கு அரிசி, இறைச்சி, காய்கறிகள் எவையும் செல்லாமல் தடுக்கப்படும் சாலைமறியல்கள் இன்னொரு விதமான போராட்டமாக எழுந்துள்ளன. இதன் விளைவை இப்போதே கேரள மக்கள் உணரத் தொடங்கி விட்டனர். தக்காளி கிலோ 200 ரூபாய்க்கு அங்கு விற்பனையாகிறது. கறிவேப்பிலையும், கொத்துமல்லியும் கூட, கட்டு இருபது ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இவை இன்றைய விலைகள். அடுத்தடுத்த நாள்களில் இன்னும் கடுமையான விலையேற்றத்தை அவர்கள் சந்திக்க வாய்ப்பிருக்கிறது. தண்ணீரை மட்டுமே தங்களிடம் வைத்துக் கொண்டிருக்கும் கேரளம், தமிழகத்திடம் தொடர்ந்து முரண்டு பிடிக்குமானால், அவர்கள் பட்டினிப் பஞ்சத்தை நோக்கி நகர்வதை யாராலும் தடுக்க முடியாது. வன்முறையைத் தூண்டி விடும் கேரள அரசியல்வாதிகள் இந்த உண்மைகளை உணரவேண்டும்.

33 ஆண்டுகளாக உள்ள இப்பிரச்சனை, இரு மாநில அரசுகளுக்கு இடையிலான பேச்சு வார்த்தைகளில் இருந்து விலகித் திடீரென இன்று கொழுந்து விட்டு எரியக் காரணமான இரு சுயநல அரசியல் வாதிகளில் ஒருவர் இன்றைய காங்கிரஸ் அரசின் கேரள முதல்வர் உம்மன்சாண்டி, மற்றவர் சர்வதேசியம் பேசும் கம்யூனிஸ்ட் அச்சுதானந்தன்.

கடந்த அக்டோபரில் காலமான காங்கிரஸ் அமைச்சர் ஜேக்கப் தொகுதியில் இடைத்தேர்தல் வர இருக்கிறது. இத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெறவில்லையானால், அது இடதுசாரி எதிர்க்கட்சியின் சமபலத்தில் இறங்கிவிடும். காங்சிரஸ் அரசுக்கு இது பெரும் பலவீனமாகிவிடும் என்பதனால் உம்மன்சாண்டியும்; அத்தொகுதியைக் கட்டாயம் கைப்பற்றிக் காங்கிரசைக் கவிழ்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் அச்சுதானந்தனும், ஆடுகிற சுயநலக் கட்சி விளையாட்டில், இருமாநில மக்களும் நெருப்பின் மேல் நிற்க வேண்டியவர்கள் ஆகிவிட்டார்கள்.

முல்லைப் பெரியாறு அணை பலவீனமாகிவிட்டது, நீர் கசிகின்றது, இடுக்கியில் நில அதிர்வு தொடர்ந்து ஏற்படுகிறது, அணை உடைந்தால் 35 லட்சம் மக்கள் அழிந்து போவார்கள், அணை உடையப் போகிறது, புதிய அணை கட்ட வேண்டும் இல்லாவிட்டால் ஆபத்து...ஆபத்து என்று மக்களைப் பீதியில் கொண்டுவந்து நிறுத்தியதன் விளைவால், இன்று முல்லைப் பெரியாறு அணை பெரும் போராட்டக் களமாகிவிட்டது.

உண்மையில் அணை பலவீனப்பட்டு விட்டதா?

கேரள உயர்நீதி மன்றத்தில், கேரள அரசுத் தலைமை வழக்கறிஞர் கே.பி. தண்டபாணி 2.12.2011ஆம் நாள் கொடுத்த விளக்க அறிக்கையில், “முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்திற்கும் அணையின் பாதுகாப்புக்கும் சம்பந்தம் இல்லை. இப்பொழுது 136.5 அடி தண்ணீர் இருப்பதால், எந்த ஆபத்தும் இல்லை. உச்சநீதிமன்ற ஆணைப்படி நீர்மட்டத்தை 142 அடி உயர்த்தினாலும் அணைக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது” என்று கூறியிருக்கிறார்.

அணை உடைந்து விடுமா? 35 லட்சம் மக்கள் அழிந்து விடுவார்களா? இந்தக் கேள்விக்கும் அதே அறிக்கையில், ஒருவேளை முல்லைப் பெரியாறு அணை உடைந்தால்?! அந்தத் தண்ணீரைத் தாங்கி ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு இடுக்கி, சிறுதோணி, குளம்மாவு அணைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதைத் திறந்துவிட்டால் தண்ணீர் அரபிக் கடலுக்குச் சென்றுவிடும் என்றும் கூறியிருக்கிறார் தலைமை வழக்கறிஞர் தண்டபாணி.

கேரள அரசின் தலைமை வழக்கறிஞர் தந்த இந்த விளக்கத்தை, உறுதி செய்யுமாறு அம்மாநில உயர்நீதிமன்றம் இட்ட ஆணையை ஏற்ற முல்லைப் பெரியாறு அணைத் தொழிற்நுட்பக் குழுத் தலைவர் பரமேசுவரன் நாயர், 06.12.2011 அன்று நீதிமன்றத்தில் கொடுத்த அறிக்கையில், கேரள அரசுத் தலைமை வழக்கறிஞர் கூறியிருப்பவை அனைத்தும் சரியே என்று உறுதிசெய்துள்ளார்.

கேரள முதல்வர் உம்மன்சாண்டியும் செய்தியாளர்களிடையே பேசும்போது, அரசுத் தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் சொன்னவை அனைத்தும் கேரள அரசின் கருத்துதான் என்றும் வாக்குமூலம் கொடுத்துள் ளார்.
உலகறிய முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்கிறது, அதற்கு ஆபத்து ஏதும் இல்லை, அப்படியே உடைந்தாலும் மக்கள் அழியமாட்டார்கள், இடுக்கி அணை அதைத் தாங்கிக் கொள்ளும் என்று உயர்நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்த பின்னர், மீண்டும் மீண்டும் அணை பாதுகாப்பாக இல்லை, உடையப் போகிறது என்று கேரள அரசு சொல்வதில் இருந்து, கேரள அரசும், உம்மன் சாண்டிகளும், அச்சுதானந்தன்களும் நாடகம் ஆடுகிறார்கள் என்பது அம்பலமாகிறது.

இந்நிலையில் கேரள முக்கிய அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல், அம்மாநிலக் கேரள இளைஞர் காங்கிரசாரும், கேரள பா.ஜ.க.வினரும் அத்துமீறி முல்லைப் பெரியாறு அணையில் நுழைந்து அணையைச் சேதப்படுத்தியுள்ளனர். குறிப்பாகக் கடப்பாறை, இரும்புக்கம்பிகளுடன் சென்ற அவர்கள் முல்லைப் பெரியாறு அணையின் பேபி அணையை உடைத்துச் சேதப்படுத்தியிருக்கிறார்கள்.

நாளை கேரள அரசு மற்றும் அரசியல் வாதிகளின் தூண்டுதலினால் கூட முல்லைப் பெரியாறு அணை தகர்க்கப்படலாம் என எண்ணத் தோன்றுகிறது. கேரள அரசைக் கண்டித்துத் தேனியில் உண்ணாவிரதம் இருந்த வைகோ, முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வெடிமருந்தை அவர்கள் வைத்திருக்கிறார்கள் என்று கூறியது அச்சத்தை ஏற்படுத்துகிறது.

இன்றைய நிலவரப்படி, கேரள அரசு கூட்டிய சிறப்புச் சட்டமன்றக் கூட்டத்தில் புதிய அணை கட்டப்பட வேண்டும் என்றும், முல்லைப் பெரியாறு அணை உடைக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானம் இயற்றப்பட்டு இருப்பது கவனிக்கத்தக்கது.

கேரள அரசு ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணை 1887ஆம் ஆண்டு தொடங்கி 1895ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது. அப்போது போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, தமிழகத்திற்கு 999 ஆண்டுகள் தண்ணீர் தர வேண்டும். இது தமிழகத்தின் உரிமை. அதன்படி 2995ஆம் ஆண்டுவரை முல்லைப் பெரியாறு அணை நீரைப் பெறுவதில் நம் உரிமை முழுமையானது.
இடையில் அணை பலவீனமாக உள்ளது என்பது போன்ற சர்ச்சையில், தமிழக அரசின் நிதி உதவியினால் அணை நவீன முறையில் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் முல்லைப்பெரியாறு அணை, தமிழக அரசின் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் அணையாகும். தமிழகத்தின் அனுமதி இல்லாமல் முல்லைப்பெரியாறு அணையைத் தொடவோ, அன்றி அங்கு சிறு துரும்பை அகற்றவோ கேரள அரசுக்கு எந்த உரிமையும் இல்லை.

கேரள அரசியல்வாதிகளான உம்மன் சாண்டி, அச்சுதானந்தன் போன்றாரின் கீழ்த்தரமான அரசியல் அணுகுமுறையில் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பவர்கள் மக்கள். கேரளத்தவர்கள் அங்குள்ள தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். கடைகளை அடித்து நொறுக்குகிறார்கள். இரப்பர் தோட்டத்துத் தொழிலாளர்களாகிய தமிழ்ப்பெண்களிடம் வரம்புமீறி நடக்கிறார்கள். இவையயல்லாம் மனித நாகரீகம் அல்ல.

தேனி, கம்பம், குமுளி மெட்டு அவைசார்ந்த பகுதியில் வாழும் தமிழர்களை இவையயல்லாம் ஆத்திரப்படுத்தி விட்டது. விளைவு, 50,000 மக்கள் கேரள எல்லைக்குள் நுழையத் திரண்டெழுந்துவிட்டார்கள். இந்த எழுச்சி இயல்பானது. இதில் கேரளத்தைப் போலத் தமிழகத்தில் எந்த அரசியல் கட்சிகளும் பின்னணியில் இல்லை. இயல்பாக எழுந்த மக்கள் எழுச்சி இது.

ஓர் அரசு, இந்த மக்களை எப்படிக் கையாள்வது என்பது கூடத் தெரியாமல், கேரள எல்லைக்குள் அவர்கள் நுழைந்தால் கண்டவுடன் சுட்டுத்தள்ள உத்தரவு பிறப்பித்தி ருக்கிறார் இடுக்கி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜார்ஜ் வர்கீஸ்.

ஜார்ஜ் வர்கீசுக்குத் தமிழர்கள் என்ன தீவிரவாதிகளா? வன்முறையாளர்களா? அல்லது இவர்கள் தமிழர்கள் என்ற இனவெறியா?

2006 பிப்ரவரி 27ஆம் தேதி உச்ச நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும், நீர்மட்டத்தை 136இல் இருந்து 142 அடியாக உயர்த்தவில்லை கேரள அரசு.

பலமாக இருக்கும் அணையைப் பலவீனம் என்று சொன்னதோடு, உச்சநீதி மன்றத் தீர்ப்புக்கு மாறாக, “கேரள அணைகள் பாதுகாப்புச் சட்டம்” ஒன்றை நிறைவேற்றி முல்லைப் பெரியாறு அணைக்குப் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

கேரள அரசின் துணையோடு, தயாரிக்கப் பட்ட டேம் 999 என்ற திரைப்படம் வன்முறையைத் தூண்டிவிட்டது. அணையை இடிக்கவும், புதிய அணையைக் கட்டவும் கேரள சட்டமன்றம் தீர்மானம் இயற்றி இருக்கிறது. மொத்தத்தில் தமிழர்களும் மலையாளிகளும் நேருக்கு நேராக மோதிக்கொள்ளும் சூழ்நிலை இன்று ஏற்பட்டுவிட்டது.

இது குறித்து நாடாளுமன்றத்தில் தமிழக உறுப்பினர்கள் பேசியிருக்கிறார்கள். பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்திருக் கிறார்கள். கேரளத்த வர்களும் பிரதமரைச் சந்தித்துள்ளனர். இரு மாநில நிலைமையின் தீவிரத்தை உணர்ந்தாவது மத்திய அரசு இதில் தலையிட வேண்டும்.

முக்கியமாகத் தமிழக அரசும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரசியல் கட்சிகளும் இணைந்து வைக்கும் கோரிக்கையான முல்லைப் பெரியாறு அணையைப் பாதுகாக்க மத்தியப் பாதுகாப்புப் படையை நிறுத்த வேண்டும் என்பதையாவது மத்திய அரசு செய்ய வேண்டும்.

எதையும் செய்யாமல், செயல்படாத பிரதமரான மன்மோகன் சிங் இதையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது வெட்கக் கேடானது.

1956ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்களாக இந்தியா பிரிக்கப்பட்டபோது, தமிழ் மண்ணின் பல பகுதிகளை அண்டை மாநிலங்களிடம் நாம் இழந்தோம். அவற்றுள் தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் குறிப்பிடத்தக்கன. அவற்றை மீண்டும் தமிழ்நாட்டுடன் இணைப்பதன் மூலமாகவே இப்பிரச்சினை ஒரு நிரந்தரமான தீர்வை எட்டும். இன்றைய போராட்டம் அதை நோக்கியே நகர்ந்து கொண்டிருப்பதை நம்மால் உணர முடிகிறது

நன்றி தோழர்: சுரேஷ் பாபு (என் நண்பன் சேஷனின் நண்பர்)

How to create blog icon - useful for bloggers

Here I am going to use www.iconj.com as my icon hosting site. This hosting site also allows you to make the favicon icon using an image.



1. So first visit www.iconj.com and make an account. Then go to your e-mail and verify it. After that you need to be signed in to your account at www.iconj.com.



2. Once you signed in, you will see the following screenshot inside that web page. First click on “CHOOSE FILE” and show your image that you want to use as your Favicon icon. You can also select a sharpen level for your Favicon icon. Then click on “UPLOAD” button.









3. Then they will make your favicon icon and automatically redirect you to the next step. In this step you should give a name for your favicon icon and save it. After saving you will see the following statement at the bottom of your window which says “Done, the new favicon has been successful saved.”



4. After that, looked in to your left side of the page, you will see a tab called “My Favicon Code”, press on it. It will show your favicon icon code. Look at the following screenshot.







5. Copy that Favicon icon code.



6. Visit your blogger DASHBOARD >> DESIGN >> EDIT HTML





7. Paste your Favicon icon code in between and tags. I have placed it just above the following code,




/*







8. Save your template and view your blog.

Wednesday, January 4, 2012

முல்லை பெரியார் அணை பாகாப்பாக இருக்கிறது

மூன்று இணைப்புகள் இருக்கிறது. தயவு செய்து கீழே உள்ள இணைப்புகளை சொடுக்கி படியுங்கள். நன்றி.

பி.பி.சி

டி.என்.நே

தி ஹிந்து

Tuesday, January 3, 2012

இழந்த வரைக்கும் போதும். இருப்பதையாவது காப்போம்

போதும் ஏமாந்தது போதும். இதை முழுவதும் படியுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பரப்புங்கள். இதை படித்துவிட்டு நான் உடனே விசய் ரசிகன் என்று நினைத்துக்கொள்ளவேண்டாம். கோடம்பாக்கத்தில் தலைமை தேடவேண்டான் என்று முடிவு எடுத்தவன்.

தமிழர்களின் நலனின் அக்கறையோடு என்றாவது நமக்கு ஒரு விடியல் கிடைக்காதா என்று ஏக்கத்தோடு காத்திருக்கும் ஒரு தமிழன்.....

இழந்த வரைக்கும் போதும். இருப்பதையாவது காப்போம்...



என்னுளே தமிழ் --உயிர் உள்ளவரை


படம்: மின்சார கனவு
பாடல்: அன்பென்ற மழையிலே



கீழே இருக்கும் வரிகளை வாசிக்கும் பொழுது தயவு செய்து மேலே குறிப்பிட்டு இருக்கும் பாடலின் ராகத்தோடு படியுங்கள்...நன்றி

தமிழ் என்ற சொல்லிலே உயிரும் கரையுதே, அது எங்கள் தாய்மொழியே
முதல் வார்த்தை உதிர்க்கும் சிசுக்கள் உலகிலே, அம்மா என்று தானே
துன்பங்கள் பல கண்டு, எங்கெங்கும் ஓடியே, பிழைப்பை தேடிணோமே
உலகெங்கும் பிரிந்தும், மீண்டும் இணையவும், உதவுது தமிழ் மொழியே
[தமிழ் என்ற]

வான்புகழ் வள்ளுவர் வாழ்வை வகுத்ததை உணர்த்துது திருக்குறளே
அறிவியல் அணுவை பிளந்து எடுத்தது எங்கள் தொல்காப்பியமே
வாடிய பயிரை கண்டு வாடிய வள்ளலாரும் எங்கள் தமிழகத்திலே
உலக மொழியாம் எங்கள் தமிழே என்றும் செம்மொழியே
[தமிழ் என்ற]

இதை இசையோடு கேட்க: சொடுக்குங்கள்

அழியா புகழ்



புறமுதுகு வார்த்தையை நீ புறம் தள்ளினாய்!
உன்னிடம் நாங்கள் கற்றது வீரம் மட்டுமல்ல நற்பண்புகளும் தான்!
நீ ஆற்றிய அரசியல் பணிகளை ஏனோ
இன்றைய அரசியல்வாதிகள் பின்பற்றவில்லை.
உன் வீரத்தை உன்னுள் அடக்காமல்
மக்களுக்கும் ஊட்டினாய்.
அடிபணியா போராட்ட குணம் உணர்த்தினாய்.
தூக்கு கயற்றிற்கு முத்தமிட்டு
வீரத்தை எங்களுள் வித்திட்டாய்!


நீ பிறந்த இந்நாள் தமிழகத்தில் வீரம் வித்திட்ட நன்னாள்!

நினைவலைகள்



கண்களில் நீர் வற்றினாலும்
ஓயாத உன் நினைவலைகள்
என்றும் என் மனதில்
வீசி கொண்டே இருக்கும்

Monday, January 2, 2012

இந்திய இராணுவ தமிழன்


களங்கள் பல கண்டு,
ரணங்கள் பல மறந்து,
என் உயிரை துச்சமாய் நினைத்து
மூவர்ண கொடியை உயிராய்
நினைத்தேன்,
எத்தனை நாட்கள், மாதங்கள்
வருடங்கள்,
குடும்பத்தை மறந்து நாட்டின்
பாதுகாப்பை
மட்டும் எண்ணியிருந்தேன்,
இன்று நான் இல்லாத என்
குடும்பம்!!!!!

மாஜி படைவீரர்களுக்கான நலத்திட்ட நிதி பற்றாக்குறை: கொடிநாள் வசூலில் சரிக்கட்டும் அவலம்

Sunday, January 1, 2012

தமிழ் மேல் ஏன் இந்த கொலைவெறி




அருமையான பாடல். மிக மிக அருமை. தற்போதைய தமிழின் நிலைமை இது தான்...........

கூடங்குளம் போகலாம் - பலகுரல் படைப்பு



நன்றி தோழர் சீனிபிரபு

விரயம்


மீந்து போகணும்

என நினைத்து

காய்ந்து சுருங்கிய

வயிறுகள்

விருந்து நடைபெறும்

தெருவினில்

இன்று நமக்கு கிடைக்கும் உணவை தயவு செய்து வீணாக்கவேண்டாம். நாம் வீணாக்கும் உணவு கூட கிடைக்காமல் காய்ந்த வயிறுகள் எத்தனையோ இந்த உலகத்தில்.