Blogger news

இன்றைய குறள்

பழமொழி

Blogger templates

Saturday, May 28, 2011

பொன்மாலை பொழுது 28-May-2011....

BARCAவும் CSKவும்
இன்று பெற்ற
வெற்றி எனக்கு
ஒரு இனிய
பொன்மாலை
பொழுது!!

பொன்மாலை பொழுது 28-May-2011....

BARCAவும் CSKவும்
இன்று பெற்ற
வெற்றி எனக்கு
ஒரு இனிய
பொன்மாலை
பொழுது!!

பூவுக்குள் புயல் .........


ஆரவாரத்துடன் புயலைப்
போல் இருப்பது ஒரு வகை.
ஆனால் நீ (டோனி)
அமைதியாய் இருந்து
இந்த 2
ஆண்டுகளில்
எத்தனை சாதனை.
அமைதியான
அடக்கமான
முறையில் நீ மட்டும்
இருந்து
உன் அணியை மட்டும்
ஆவேசமாக விளையாட செய்து
உன் அணிக்கு மகுடங்கள்
அணிவிக்கிறாய்.
உனக்கு மனமார்ந்த
வாழ்த்துக்கள்.

என் ஆதங்கம்.......

உலகில் இருக்கும் எந்த இனத்தவர் அவருடைய தாய் மொழியில் பேசினாலும் நமக்கு புரிவதில்லை. ஆனால் நம் தமிழர்கள் பேசும் பொழுது அனைத்து இனத்தவரும் புரிந்து கொள்கின்றனர். அது தான் தமிழின் பெருமை என்று நினைக்க வேண்டாம். தமிழன் மட்டும் தான் தமிழனிடம் தாய் மொழியில் பேசுவதில்லை.

அது என்னமோ தெரியவில்லை?

ஒரு வேலை ஆங்கிலத்தில் பேசினால் தான் நாகரீகம் என்று நினைத்து கொள்கின்றார்களா, என்றும் புரியவில்லை. நாகரீகம் என்பது எது? உன்னுடைய தாய்மொழியை நீ பேசுவதில் தான் உன்னுடைய நாகரீகம் இருக்கிறது. இது தெரியாமல் நிறைய பேர் திரிந்து கொண்டு இருக்கின்றனர்.

நம் தாய் மொழியில் எத்தனை எழுத்துக்கள், எத்தனை மரியாதை நிமித்தமான வார்த்தைகள் இருக்கிறது என்று தெரிந்து கொள்வோம். அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகளில் இருந்து ஆங்கில வார்த்தைகளை தயவு செய்து அகற்றுங்கள். நம் மொழி தானாக வளரும்.

உங்கள் தாய் மொழியை வேறு மொழி ஆட்க்கொண்டது என்று காரணம் கூறுவது சரியில்லை. பழகிவிட்டது ஆதலால் நான் நினைத்தாலும் மாற்ற முடியவில்லை என்று கூறுவது ஏற்று கொள்ள முடியாது. சிறு வயதில் இருந்து உற்சாக பானம் அருந்தி பழக்கம் இல்லை. ஆனால் அதை மட்டும் நடுவில் பழகி கொள்கின்றோம்.

ஆனால், தமிழர்களிடம் பேசும் பொழுது ஆங்கில வார்த்தைகளை தவிர்க்கமுடியாது என்று கூறுவது நம்முடைய அடையாளத்தை தொலைத்துக் கொண்டுஇருக்கிறோம் என்பதை மட்டும் நினைவில் கொள்ளவேண்டும்.

சில புரியாத மேற்கத்திய வெளிநாட்டு உணவுகளுக்கு தமிழில் என்ன பெயர் என்று கேட்டு தமிழ் ஆர்வம் உள்ளவர்களை மட்டம் தத்துவது போன்ற காரியங்களில் ஈடுபடுவதை விட்டுவிட்டு ஒரு நாளில் தமிழர்களிடம் எப்படி தமிழ் பேசினோம் என்று யோசித்துப் பார்க்கவும்.

ஆங்கிலம் தேவையான ஒன்று என்று கூறுபவர்களிடம் ஒன்று கேட்டுக் கொள்கிறேன். தமிழர்களிடம் ஆங்கிலம் வேண்டாம் என்று தான் கூறுகிறேன். ஒரு தமிழனனுக்கு நிறைய மொழி தெரிவது எனக்கு பெருமை தரக்கூடிய விடயம். தமிழரிடம் ஆங்கிலம் வேண்டாம் என்பது தான் கோரிக்கை.

அதற்காக ஆங்கிலம் பேசக்கூடாது என்று நினைக்கவேண்டாம். ஆங்கிலம் பேச வேண்டியவர்களிடம் மட்டும் பேசுங்கள். அது போதும். தகவல் தொழில்நுட்ப துறையில் ஆங்கிலம் என்பது அவசியமாக இருக்கிறது. இல்லை என்று சொல்வதற்கில்லை. அது அலுவலகம் அல்லது நிறுவனம் உள்ளேயே இருக்க வேண்டும். வெளியே வந்து தமிழரிடம் தமிழிலேயே பேசவேண்டும் என்று அனைவரும் உறுதிமொழி எடுப்போம்.

"தமிழ்" நம் தாய் மொழி மட்டும்மல்ல, நம்முடைய அடையாளம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

Thursday, May 26, 2011

ஆயிரம் தான் கவி சொன்னேன்

கவி பேரரசு வைரமுத்துவின் வைர வரிகள்


ஆயிரம் தான் கவி சொன்னேன்
அழகழகா பொய் சொன்னேன்
பெத்தவளே உன் பெருமை ஒத்த வரி சொல்லலையே
காத்தெல்லாம் மகன் பாட்டு, காகிதத்தில் அவன் எழுத்து
ஊரெல்லாம் மகன் பேச்சு, உன் கீர்த்தி எழுதலையே௦.

எழுதவோ படிக்கவோ இயலாத தாய் பற்றி
எழுதி என்ன லாபமன்னு எழுதாம போனேனோ ?
எழுதவோ படிக்கவோ இயலாத தாய் பற்றி
எழுதி என்ன லாபமன்னு எழுதாம போனேனோ??

பொன்னையா தேவன் பெற்ற, பொன்னே குலமகளே,
என்னை புறந்தள்ள வயிற்று வலி பொறுத்தவளே,
வைரமுத்து பிறப்பான்னு வயிற்றில் நீ சுமந்ததில்ல
வைரமுத்து பிறப்பான்னு வயிற்றில் நீ சுமந்ததில்ல
வயிற்றில் நீ சுமந்த ஒண்ணு வைரமுத்து ஆயிடுச்சு !!!!

கண்ணு காது மூக்கோட, கருப்பா ஒரு பிண்டம்,
இடப்பக்கம் கிடக்கையில என்னென்ன நினைச்சிருப்பே!
கண்ணு காது மூக்கோட, கருப்பா ஒரு பிண்டம்,
இடப்பக்கம் கிடக்கையில என்னென்ன நினைச்சிருப்பே!
கத்தி எடுப்பவனோ? களவாட பிறந்தவனோ ?
தரணி ஆள வந்த, தாசில்தார் இவன் தானோ ?
இந்த விவரங்க, எதோன்னும் தெரியாம,
நெஞ்சூட்டி வளத்த உன்ன, நெனச்சா அழுகை வரும் .

கத கதன்னு கலி கிண்டி, கலிக்குள்ள குழி வெட்டி,
கருப்பட்டி நல்லெண்ணெய் கலந்து தருவாயே,
கத கதன்னு கலி கிண்டி, கலிக்குள்ள குழி வெட்டி,
கருப்பட்டி நல்லெண்ணெய் கலந்து தருவாயே,
தொண்டையில, அது இறங்கும் சுகமான இளம் சூடு,
மண்டையில இன்னும் மசமசன்னு நிக்குதம்மா………

கொத்தமல்லி வறுத்து வச்சு, குறுமிளகாய் ரெண்டு வச்சு,
சீரகமும் சிறுமிளகும், சேத்து வச்சு நீர் தெளிச்சு.
கும்மி அரச்சி, நீ கொழ கொழன்னு வழிக்கயில,
அம்மி மணக்கும், அடுத்த தெரு மணமணக்கும்,

தித்திக்க சமச்சாலும், திட்டிகிட்டே சமச்சாலும்,
கத்திரிக்காயில் நெய் வழியும், கருவாட்டில் தேன் ஒழுகும்,
கோழி குழம்பு மேல, குட்டி குட்டியாய் மிதக்கும் தேங்காய் சில்லுக்கு,
தேகமெல்லாம் எச்சில் ஊரும்…..

வறுமையில நாமப்பட்ட வலி தாங்க மாட்டான் அவன்,

பேனா எடுத்தேன், பிரபஞ்சம், பிச்சு ஏறிஞ்சேன்,

பாசமுள்ள வேலையில, காசு பணம் கூடலையே,
காசு வந்த வேலையில பாசம் வந்து சேரலையே…..

கல்யாணம் நா செஞ்சு, கதியற்று நிக்கையில,
பெத்த அப்பன், சென்னை வந்து சொத்தெழுதி போன பின்னே,
அஞ்சாறு வருஷம், உன் ஆசை முகம் பாக்காம,
பிள்ளை மனம் பித்தாச்சே, பெத்த மனம் கல்லாச்சே…..

படிப்பு படிச்சிகிட்டே பணம் அனுப்பி வச்ச மகன்
கை விட மாட்டான்னு கடைசியில நம்பலையே
பாசம் கண்ணீரு பழைய கதை எல்லாமே
வெறிச்சோடி போன வேதாந்தம் ஆயிடுச்சே,

வைகையில ஊர் முழுக, வல்லூறும் சேர்ந்தெழுக,
கை பிடியாய் சேர்த்து வந்து, கரை சேர்த்து விட்டவளே….
எனக்கு ஒண்ணு ஆனதுனா, உனக்கு வேற பிள்ளை உண்டு,
உனக்கு ஒண்ணு ஆனதுனா எனக்கு வேற தாயும் உண்டா ?????

பகலில் ஓர் இரவு...

நிலவை போல்,
என் வாழ்க்கை
வானத்தில்
நீ
வந்ததால்
பகலில் ஓர் இரவு!

Thursday, May 19, 2011

நீ.

குருடனான
என்னிலும்
வண்ணக்கனவுகள்,
நீ என்னுள்
இருப்பதால்!

Wednesday, May 18, 2011

வெற்றி .......

நிஜங்கள் என்றும் நிலைக்கும்,
உண்மை பேசுகின்றவர்கள்
தோற்பதில்லை.
நடப்பது நல்லதாகவே நடக்கும்.
உண்மையை பின்பற்றுகின்றவர்கள்
வருந்தவோ
அச்சப்படவோ
அவசியம் இல்லை.
ஜெயம் உண்டாகட்டும்

ஹ்ம்ம்

ஒவ்வொரு வயதை கடக்கும் பொழுது, அதன் கடமையை சரியாக
செய்தால் வாழ்க்கை மேம்படும் மற்றும் சிறப்பாகவும் இருக்கும்.....

உன் கண்....

உள்ளம் பேச
நினைக்கும் கோடி
வார்த்தைகளை,
உன் கண் சிமிட்டல்
ஒரு நொடியில்
பேசுகிறது! :)

Tuesday, May 17, 2011

நான் வீழ்ந்த அந்த நொடி

உள்ளம் பேச நினைக்கும்
கோடி வார்த்தைகளை
உன் கண்
சிமிட்டல்
சொல்லிவிடுகிறது.
ஒரு நொடியில்!

இணையதள நண்பனே.....

நம் நட்பு மலர்ந்த
ஓராண்டில் உங்கள் பிறந்தநாள்,
நம் நட்பு காலங்களில்
முதலாவது,
சிறப்பாக தான் தெரிகிறது.
இறுதிவரை நம் நட்பு
மேலோங்க மற்றும் சிறந்து
விளங்க
இந்த நாள் போலவே காலம்
முழுவதும் சிறப்பாக அமைய
என்னுடைய மனமார்ந்த
பிறந்த வாழ்த்துக்கள்.

Monday, May 16, 2011

அட.....போங்கப்பா!!!!

பாடம் கற்றுகொடுக்க
வாழ்க்கை என்ன
ஆசானா?
வாழ்க்கை வாழத்தானே??

Saturday, May 7, 2011

அன்னையர் தின வாழ்த்துக்கள்.......

அன்பு தாயே,
ஐயிரண்டு மாதங்கள் உன்னில் என்னை சுமந்து
என் உயிர் இவ்வுலகை காண அல்லும் பகலும்
காத்தாயே...

கருவறையில் என்னை சுமக்கும் பொழுது
என்னென்ன கட்டுபாடோடு வாழ்ந்தாய்..
பிடித்த உணவுகளை உட்கொள்ளாமல், எனக்காக
உன் சுவையை அடக்கிகொண்டாயே!
உருவத்திலும் நடையிலும் மாற்றமும் ஏற்பட்டது

இந்த பூமிப்பந்தில் நான் வந்த பொழுது
உன் இரத்தத்தை பாலாக்கி ஊட்டினாய்!
நீ உண்ணாமல் இருந்த பொழுதிலும் எனக்கு பசியாற்றினாய்!

எத்தனை இரவுகள் என்னை பசியாற்ற
நீ தூக்கத்தை தொலைத்திருப்பாய்.
கண்ணீரே உன்னிடத்தில் வற்றி தான்
போனது, நோயுற்று நான் இருந்த காலங்களில்.

நான்கு கால்களில் தவழ்ந்த நான்
முதல் முறை இரு கால்களில் நின்ற பொழுது,
உன் கண்களின் நீர்த்துளிகள் கன்னத்தில்
வழுக்கி சென்றது.
நடைவண்டி பழகியபோதும், சாஞ்சாடும் குதிரையாடும் போதும்
எனக்கு ஒன்றும் நேரக்கூடாது என்று
உன் மனம் பதபதைத்து தான் போனது.

மாலை நேரங்களில் விளையாடும் பொழுது,
வேலியோரம் இருக்கும் பூச்சிகளின் மேலேயும்,
இரவு நேரங்களில் தூங்கும் பொழுது,
வீட்டில் இருக்கும் கொசுக்களின் மீதும்
உனக்கு கோபமும் வந்தது.
அதையும் தாண்டி "என்னை தீண்டு என் செல்வத்தை
தீண்டாதே", என்று அவைகளிடமும்
நீ பேசவும் செய்தாய்.

பள்ளிக்கு நான் அழுதுக்கொண்டு
குதிரை வண்டியில் போனாலும்,
மதிய இடைவேளையில் கொடும் வெயிலிலும்,
மழையிலும் உணவு ஊட்ட கால் கடுக்க வருவாயே!
ஏன் என்று பக்கத்து வீட்டு அத்தை
கேட்டால் நான் ஊட்டாமல் என் கண்மணி
உணவெடுக்கமாட்டன் என்று கூறினாயே!
அந்த தயிர் சாதமும், நறுக்கிய மாம்பழமும்
இன்னமும் நிழலாய் என் இதயத்தின் ஆழத்தில் இருக்கிறது!

அன்று நீ விரல்பிடித்து தமிழ் கற்றுக்கொடுத்தாய்!

மாலை பொழுதில் என்னுடன் நேரம்
செலவழித்து, என் தந்தைக்கு
ஏனோ உணவு பரிமாறுவது தாமதமாக போனது.
அதற்காக பல நேரங்களில் வசையும்,
சில நேரங்களில் கசையும் வாங்கியுள்ளாய்.

நீ எனக்கு ஒதுக்கிய நேரங்களை இன்று உனக்கு
ஒதுக்க இயலாமல், நீ ஒரு ஊரிலும்,
நான் ஒரு ஊரிலும்!
நீ என் விரல் பிடித்து சொல்லிகொடுத்த தமிழை,
மடிக்கணியில் தட்டச்சி பலகையை
பயன்படுத்தி இணையத்தில் வாழ்த்துக்களும்
நன்றிகளும் சொல்கிறேன்.

நீ என் தாய் என்பதில் எனக்கு பேரின்பம்.
அன்னையர் தின வாழ்த்துக்கள்.......

என்னை பெற்றவளே

கை பிடித்து எழுத
சொல்லிக்கொடுத்தாய்..
இன்று உனக்காக
எழுதுகிறேன்
"நன்றி".
இதை எழுதியும்
ஏனோ என் மனம்
திருப்பியடையவில்லை.
என்னை சுமந்தவளே,
நீயே என் சொத்து!
என்னை பெற்றவளே,
ஆதியும் நீயே அந்தமும் நீயே!

Thursday, May 5, 2011

அன்பு சகோதரிக்கு........

மிடுக்காய் எடுத்த சவாலில்
மிக பெரிய வெற்றி பெற
மிகுந்த ஆர்வத்துடன்
மிரண்டு போகாமல்,
மிரட்டலுக்கு அஞ்சாமல், நிதானமாய்
மின்மினியாய்
மிளிர என்னுடைய வாழ்த்துக்கள்!