Blogger news

இன்றைய குறள்

பழமொழி

Blogger templates

Tuesday, March 29, 2011

தேர்தலே வருக.............

தேர்தலே வா!
இந்த முறை நீ தேர்ந்த்தேடுத்திருப்பது
என் தாயக தமிழகமா?
ஐந்து ஆண்டுக்கு
முன்பு வந்தாய். உன்னை
வரவேற்க என்
இடது கை ஆள்காட்டி
விரலில் நீல மை.
ஆனால் என் நெற்றியிலோ பட்டை நாமம்!
அது என்னமோ உனக்கு
அரசியல்வாதிகளை பிடித்த
அளவிற்கு,
பாமர மக்களை பிடிக்கவில்லை!
ஏன் இந்த பாரபட்ச்சம்?
எலிக்கரி தின்னவைத்தாய்!
உன்னால் மக்கள் சேவை
என்ற அரசியல், இப்பொழுது
தொழில் ஆகிவிட்டது!
போக்கிரிகள் பெருகுகின்றனர்!
இலவசம் என்ற பெயரில்
மக்களை
சோம்பேறிகளாக மாற்றுகின்றனர்!
மக்களுக்கு
என்ன செய்தீர்கள் என்று
ஆட்சியாலர்களைக்
கேட்டால், சென்ற ஆட்சியில்
அந்த கட்சி என்ன செய்தது?
என்று திருப்பிக் கேட்க்கின்றனர்!
தொழிலாகி போன அரசியலால்
ஊழலும் அதிகமானது,
அரசியல்வாதிகளும்
அவர்களின் குடும்பமும்
பெருத்து போனது!
ஆனால் பாமரனின்
வயறு மட்டும்
ஏனோ
சுருங்கியே போனது!
ஒரு ரூபாய்க்கு அரிசியை
கொடுத்தாய்,
மளிகை விலைகளை உயர்த்தினாய்!
இலவச வண்ண தொலைக்காட்சி
கொடுத்தாய்,
மின்சாரத்தை பிடிங்கிகொண்டாய்!
அரசாங்க பள்ளியில் படிக்கும்
எங்கள் குழந்தைகள்
படிக்க முடியவில்லை!
எங்கள் ஆண்களுக்கு
வேலையும் இல்லை!
ஐந்து வருடத்திற்கு பதிலாக
ஆண்டிற்கு ஒரு முறை வா!
ஏழை மக்களுக்கு ஒரு மாதம்
வேலையும், சாப்பாடும்,
திரும்பும் பொழுது
பணமும் கிடைக்கும்.
ஒரு வாக்கிற்கு 5000
பெற்றால்
அடுத்த இருமாதத்திற்கு
பாமர மக்கள் தங்கள்
பொழப்பை ஓட்டிவிடுவார்கள்.
ஆக மொத்தம் மூன்று மாதம்!!
எங்கள் சோற்று பிரச்சனை தீரும்.
அதனால் ஆண்டிற்கு ஒரு முறை வா!

0 comments:

Post a Comment