Blogger news

இன்றைய குறள்

பழமொழி

Blogger templates

Tuesday, March 29, 2011

தோழிகளே...உங்களுக்காக

சோதனை.
இந்த வார்த்தையை படிக்கும்
பொழுது, எத்தனை
துன்பம்.
ஆனால் தோழிகளே,
இடர் கற்களை
உடைத்தெறியும் திறமை
இருக்கும் நீங்கள் துவளாமல்
முன்னேறி, வாழ்க்கையில்
சாதனைகளை வைத்து
ஒரு இமையமலையை
உருவாக்கி,
முன் உதாரணமாக
திகழ என்னுடைய மனமார்ந்த
வாழ்த்துக்கள்.........

தேர்தலே வருக.............

தேர்தலே வா!
இந்த முறை நீ தேர்ந்த்தேடுத்திருப்பது
என் தாயக தமிழகமா?
ஐந்து ஆண்டுக்கு
முன்பு வந்தாய். உன்னை
வரவேற்க என்
இடது கை ஆள்காட்டி
விரலில் நீல மை.
ஆனால் என் நெற்றியிலோ பட்டை நாமம்!
அது என்னமோ உனக்கு
அரசியல்வாதிகளை பிடித்த
அளவிற்கு,
பாமர மக்களை பிடிக்கவில்லை!
ஏன் இந்த பாரபட்ச்சம்?
எலிக்கரி தின்னவைத்தாய்!
உன்னால் மக்கள் சேவை
என்ற அரசியல், இப்பொழுது
தொழில் ஆகிவிட்டது!
போக்கிரிகள் பெருகுகின்றனர்!
இலவசம் என்ற பெயரில்
மக்களை
சோம்பேறிகளாக மாற்றுகின்றனர்!
மக்களுக்கு
என்ன செய்தீர்கள் என்று
ஆட்சியாலர்களைக்
கேட்டால், சென்ற ஆட்சியில்
அந்த கட்சி என்ன செய்தது?
என்று திருப்பிக் கேட்க்கின்றனர்!
தொழிலாகி போன அரசியலால்
ஊழலும் அதிகமானது,
அரசியல்வாதிகளும்
அவர்களின் குடும்பமும்
பெருத்து போனது!
ஆனால் பாமரனின்
வயறு மட்டும்
ஏனோ
சுருங்கியே போனது!
ஒரு ரூபாய்க்கு அரிசியை
கொடுத்தாய்,
மளிகை விலைகளை உயர்த்தினாய்!
இலவச வண்ண தொலைக்காட்சி
கொடுத்தாய்,
மின்சாரத்தை பிடிங்கிகொண்டாய்!
அரசாங்க பள்ளியில் படிக்கும்
எங்கள் குழந்தைகள்
படிக்க முடியவில்லை!
எங்கள் ஆண்களுக்கு
வேலையும் இல்லை!
ஐந்து வருடத்திற்கு பதிலாக
ஆண்டிற்கு ஒரு முறை வா!
ஏழை மக்களுக்கு ஒரு மாதம்
வேலையும், சாப்பாடும்,
திரும்பும் பொழுது
பணமும் கிடைக்கும்.
ஒரு வாக்கிற்கு 5000
பெற்றால்
அடுத்த இருமாதத்திற்கு
பாமர மக்கள் தங்கள்
பொழப்பை ஓட்டிவிடுவார்கள்.
ஆக மொத்தம் மூன்று மாதம்!!
எங்கள் சோற்று பிரச்சனை தீரும்.
அதனால் ஆண்டிற்கு ஒரு முறை வா!

Monday, March 28, 2011

என் உயிர் தோழனே

சுயநலமான சில
நண்பர்களுக்கிடையில்,
ஏனோ என் மனம்
மட்டும்
தனியாக அழுகிறது!
என் உயிர் தோழனே,
உன்னால் அனைத்து
நண்பர்களையும்
வெருத்துவிடுவேனோ
என்ற பயம்
ஆட்க்கொல்கிறது!
நான் தோற்றுவிட்டேனா?
அல்லது என் நட்பு
தோற்றுவிட்டதா?
என்ற
கேள்விகள் நித்தமும்
என்னை துளைக்கிறது....
விடை தெரியாமல் நான்
தனிமையில் அழுகிறேன்.......

Thursday, March 17, 2011

வலி

நீயில்லா
என் அகத்தின்
வலி,
என்
முகத்தில் இல்லை,
என் கண்களில் பார்.

Monday, March 7, 2011

புன்னகைபூவே

புன்னகை பூவை,
எனக்காக உன்
உதட்டில் உதிர்ப்பாயா?
அதற்காக ஏங்குகிறேன் நான்
சாகும்
இறுதி நொடிகளில்!!