சிரிப்பு,
என்றோ எங்கள்
மூதாதையர் மண்ணுக்குள்ளே
மூடி புத்தைத்தது!
தொலைந்து போன சிரிப்பை உழைத்து
சம்பாரிக்கலாம் என்று நினைத்தோம்.......
காணி,
இனவாதி கொஞ்சம் கொஞ்சமாய்
பிட்டு பெயர்த்து எடுத்துக்
கொள்கிறான்!
எங்கள் நிலங்களையும் ஆக்கரமித்து
எங்களை ஆழ்ந்த சோகத்தில் மூழ்கடித்தார்கள்..
துயரம்,
என்ற ஒரே ஒரு வார்த்தை
மட்டும் தான் எங்களின் வாழ்வு
முழுவதிலும் இருக்கிறது!
துயரத்தை கடவுளிடம் முறையிடலாம்
என்று சொல்ல எத்தனிக்க.....
கோவில்,
அவர்களின் கட்டுப்பாட்டிலும்,
சில கோவில்களின் எங்கள் கடவுள்கள்
அவர்களின்
கடவுள் உருவத்தில் இருக்கிறது,
அதற்கு என் மொழி தெரியாது!
என் செய்வோம் என்ற யோசனையில்
நாங்கள் நம்பியது எங்கள் வீரத்தை....
வீரம்,
ஒன்றை மட்டும் கையில்
வைத்து அனைத்தையும்
மீட்க நினைத்தோம்!
வெற்றியும் பெற்றோம்.
ஆனால்,
முத்த குடிகளான எங்களை, உலகமே
வஞ்சனை
செய்து ஒன்று கூடியது.
ஒன்று சேர்ந்தார்கள்
விரோதிகளாய் இருப்பவர்கள் கூட.
இன்று நாங்களோ
விரக்த்தியின் விளிம்பில் மட்டுமல்ல
மரணத்தின்
விளிம்பிலும் தான்!!!!
0 comments:
Post a Comment