ஓங்கிவளர்ந்த மரங்கள்,
பசுமையான வயல்கள்,
மீன்பிடி படகுகள்,
செழிப்பான காடுகள்,
இசையை தாலாட்டும் அருவிகள்,
தாகத்தை தணிக்கும் ஆறுகள்,
தண்ணீர் சேமித்த ஏரிகள்,
வரலாற்றை தாங்கி நிற்கும் கோவில்கள்,
மாவீரர் துயிலும் இல்லங்கள்,
அனைத்திலுமே இன்று இரத்தச் சுவடுகள்..
வாழும் வீடுகள் இடுகாடானது...
இரத்தத்தை மற்றுமே, நாடு
வழியவிட்டிருக்கின்றது..
நாடே அழுகின்றது
இரத்தக் கண்ணீரில்
0 comments:
Post a Comment