Blogger news

இன்றைய குறள்

பழமொழி

Blogger templates

Thursday, February 24, 2011

அலைகள் ஓய்வதில்லை

என் கரையில்
அவள்
நினைவலைகள்
என்றும்
ஓய்வதில்லை!!

காதல் தேசம்

அவள் என்னை
ஆட்கொண்டதால்
என் காதல் தேசத்தின்
நிரந்தர
மகாராணி அவளே!

மந்திர புன்னகை

என்னை எப்பொழுதும்
அவள் பக்கமே
கவர வைக்கும்
அவள் புன்னகை தான்
மந்திர புன்னகை!

நினைத்தாலே இனிக்கும்

என்
சிந்தனையில்
அவளின்
நீங்கா
நினைவுகள்
என்றும் எனக்கு
நினைத்தாலே இனிக்கும்!

சுவரில்லா சித்திரங்கள்

(என்)அவள்
இல்லாத என்னவளுக்காக
நான் எழுதிய
கவிதைகள்
சுவரில்லா சித்திரங்கள்!!

Thursday, February 17, 2011

இரத்தத் சரித்திரம்

ஓங்கிவளர்ந்த மரங்கள்,
பசுமையான வயல்கள்,
மீன்பிடி படகுகள்,
செழிப்பான காடுகள்,
இசையை தாலாட்டும் அருவிகள்,
தாகத்தை தணிக்கும் ஆறுகள்,
தண்ணீர் சேமித்த ஏரிகள்,
வரலாற்றை தாங்கி நிற்கும் கோவில்கள்,
மாவீரர் துயிலும் இல்லங்கள்,
அனைத்திலுமே இன்று இரத்தச் சுவடுகள்..
வாழும் வீடுகள் இடுகாடானது...
இரத்தத்தை மற்றுமே, நாடு
வழியவிட்டிருக்கின்றது..

நாடே அழுகின்றது
இரத்தக் கண்ணீரில்

அனாதைகள்

பாலுக்கு அழுகும் குழந்தை,
அழுகும் குழந்தையுடன் அன்னை,
உணவுக்கு சுற்றும் தந்தை,
மருத்துக்கு அலையும் தத்தா பாட்டி,
கைதாகி இருக்கும் அண்ணன் தம்பிகள்,
கற்பை காப்பாற்ற முயலும் அக்காள் தங்கைகள்,
இவர்கள் அனைவரும்
ஈழ மண்ணிலே,
மண்ணிற்கு சொந்தமான
அனாதைகள்!!!!

கண்ணீர்த்துளிகளுடன்..........

விரக்த்தியின் விளிம்பில்

சிரிப்பு,
என்றோ எங்கள்
மூதாதையர் மண்ணுக்குள்ளே
மூடி புத்தைத்தது!

தொலைந்து போன சிரிப்பை உழைத்து
சம்பாரிக்கலாம் என்று நினைத்தோம்.......

காணி,
இனவாதி கொஞ்சம் கொஞ்சமாய்
பிட்டு பெயர்த்து எடுத்துக்
கொள்கிறான்!

எங்கள் நிலங்களையும் ஆக்கரமித்து
எங்களை ஆழ்ந்த சோகத்தில் மூழ்கடித்தார்கள்..

துயரம்,
என்ற ஒரே ஒரு வார்த்தை
மட்டும் தான் எங்களின் வாழ்வு
முழுவதிலும் இருக்கிறது!

துயரத்தை கடவுளிடம் முறையிடலாம்
என்று சொல்ல எத்தனிக்க.....

கோவில்,
அவர்களின் கட்டுப்பாட்டிலும்,
சில கோவில்களின் எங்கள் கடவுள்கள்
அவர்களின்
கடவுள் உருவத்தில் இருக்கிறது,
அதற்கு என் மொழி தெரியாது!

என் செய்வோம் என்ற யோசனையில்
நாங்கள் நம்பியது எங்கள் வீரத்தை....

வீரம்,
ஒன்றை மட்டும் கையில்
வைத்து அனைத்தையும்
மீட்க நினைத்தோம்!
வெற்றியும் பெற்றோம்.

ஆனால்,
முத்த குடிகளான எங்களை, உலகமே
வஞ்சனை
செய்து ஒன்று கூடியது.
ஒன்று சேர்ந்தார்கள்
விரோதிகளாய் இருப்பவர்கள் கூட.

இன்று நாங்களோ
விரக்த்தியின் விளிம்பில் மட்டுமல்ல
மரணத்தின்
விளிம்பிலும் தான்!!!!