ஒரு விலைமகள் தான் எப்படி இந்த நிலைக்கு வந்தேன் என்பததை கூறும் படியாக அமைந்திருந்தது இந்த பாடல்.
வந்தனமாம் வந்தனமாம்
எல்லோருக்கும் வந்தனம்
மனமணமாம் சந்தனம்
சந்தனத்த பூசிகிட்டு சந்தோசமா கேக்கணும்
கலகலப்பா ஆடணும்,
கையல தாளம் போடணும்
விசுலு ராகம் பாடனும்
ஜில்லா விடு ஜில்லா வந்த
கதைய நீயும் கேளையா
தூத்துக்குடி பொண்ணையா
நான் தூத்துக்குடி பொண்ணையா
என் கதைய கேளையா
சுகத்த விக்குற பொண்ணுக்கும்
மனசிருக்குது பரையா
அஞ்சு பொண்ண பெத்தெடுத்த
அரசன் கூட ஆண்டியாம்
வாழ்க்கையில போண்டியாம்..
எட்டாவதா என்னை பெத்த
எங்கப்பனுக்கு தெரியல
சொக்கனும் அத சொல்லல..
வளைந்து நிக்குற தென்னையா
வக்கணையா நானின்னேன்
ஏழையும் கரை சேத்ததாலே
ஏழரையா நானானேன்.
அங்கெ சுத்தி இங்கே சுத்தி
வந்தானையா மாப்பிள
சீக்காளிக்கு மறுபுள்ள
பழைய பாயா என்ன சுத்தி
போனானையா மாப்பிள
அவன் துப்பில்லாத ஆம்பிள
அஞ்சாந்நாளு மூட்டு வலியில
மாப்பிள தான் படுத்திட்டான்
என் கனவையெல்லாம் ஒடச்சிட்டான்
காச்சலுக்கு காடு வித்தேன்
இருமலுக்கு நிலம் வித்தேன்
வித்ததேல்லாம் போக மிச்சமாக
நான் நானின்னேன்
அட எச்சமாக நானின்னேன்
ஊரிலுள்ள மீசையெல்லாம்
என்ன சுத்தி வந்திச்சு
இள மனச கெடுத்திச்சு
உசிர விட மானம் பெருசு
புத்திக்கு தான் தெரிஞ்சிச்சு.
வயிறு எங்கே கேட்டிச்சு
ஒரு சாணு வயித்துக்கு தான்
எல்லாத்தையும் விக்குறேன்
நான் எல்லாத்தையும் விக்குறேன்
இப்ப இங்கே நிக்குறேன்
என் கதைய முடிக்கிறேன்
0 comments:
Post a Comment