
ஒடுக்கப்பட்ட மக்கள்
என்றும் ஒதுங்கார்.
விரட்டப்பட்ட சமுதாயம்
அரசியலிளிருந்து விலகுவதில்லை.
கண்கள் கண்ணீர் சொரிந்தாலும்
என்றும் சுதந்திரதாகம் அதனுள்.
ஆதரவில்லாத விலகிய கைகள்
திடமாக ஒன்று கூடும்.
துவண்டிருக்கும் தோள்கள்
சுதந்திர தினவெடுக்கும்.
உடலளவில் சோர்ந்திருந்தாலும்
மனதளவில் திடமாக.
முள்வேலி கம்பிகளை
மலர் மாலையாக மாற்ற
என்றும் நாங்கள்
சுதந்திரத்தை நோக்கியே....
2 comments:
அடக்கப்பட்ட மக்கள்- மீண்டும் அதிகமான வீரியத்தோடு வேகமாக எழுவார்கள் என்பதை உங்கள் கவிதை உரைத்து நிற்கிறது.
நன்றி தோழரே
Post a Comment