Blogger news

இன்றைய குறள்

பழமொழி

Blogger templates

Sunday, April 24, 2011

ஒன்றுபடுவோம் வென்றெடுப்போம்

அறை முழுவதும் இருள்
இருந்தாலும்,
ஒரு தீக்குச்சி
போதுமே இருளை
அகற்ற...
ஊர் மீது பனி போர்வை
போர்த்தினாலும்
ஒரு சூரியன்
போதுமே பனி
அகலுமே..
நடக்கவே நடக்காது
என்று முட்டுக்கட்டை
போட்டாலும், ஊக்கப்படுத்தும்
ஒரு வார்த்தை போதுமே
முன்னேறி செல்ல!
ஒட்டி கரம் கோர்த்து
நடக்காவிட்டாலும்,
கனவை சிதைக்கும்
வார்த்தைகள் வேண்டாம்!
ஒன்றுபடுவோம்
வென்றெடுப்போம்.

யாரிடமும் மண்டியிடாமல்,
தன்மானம் ஒன்றே மூச்சி,
என்று வாழும் தமிழர்கள்
இணைந்து நம் தேசத்தை
மீட்டெடுக்க வேண்டும்..

0 comments:

Post a Comment