Blogger news

இன்றைய குறள்

பழமொழி

Blogger templates

Saturday, January 22, 2011

எந்த ஊர் என்றவனே - காட்டு ரோஜா



எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா!
எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா!

உடலூரில் வாழ்ந்திருந்தேன் உறவூரில் மிதந்திருந்தேன்
உடலூரில் வாழ்ந்திருந்தேன் உறவூரில் மிதந்திருந்தேன்
கருவூரில் குடி புகுந்தேன் மண்ணூரில் விழுந்து விட்டேன்!
கருவூரில் குடி புகுந்தேன் மண்ணூரில் விழுந்து விட்டேன்!
கண்ணூரில் தவழ்ந்திருந்தேன் கையூரில் வளர்ந்திருந்தேன்
காலூரில் நடந்து வந்தேன் காளையூர் வந்துவிட்டேன்!

வேலூரைப் பார்த்து விட்டேன் விழியூரில் கலந்து விட்டேன்
பாலூறும் பருவம் என்னும் பட்டினத்தில் குடிபுகுந்தேன்!

எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா!

காதலூர் காட்டியவள் காட்டூரில் விட்டுவிட்டாள்
காதலூர் காட்டியவள் காட்டூரில் விட்டுவிட்டாள்
கன்னியூர் மறந்தவுடன் கடலூரில் விழுந்துவிட்டேன்!
கன்னியூர் மறந்தவுடன் கடலூரில் விழுந்துவிட்டேன்!

பள்ளத்தூர் தன்னில் என்னை பரிதவிக்க விட்டு விட்டு
மேட்டூரில் அந்த மங்கை மேலேறி நின்று கொண்டாள்!

கீழுரில் வாழ்வதற்கும் கிளிமொழியாள் இல்லையடா
மேலூரு போவதற்கும் வேளை வரவில்லையடா!

எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா!

எங்கிருந்தாலும் வாழ்க - நெஞ்சில் ஓர் ஆலயம்

எங்கிருந்தாலும் வாழ்க உன் இதயம் அமைதியில் வாழ்க
மஞ்சள் வளத்துடன் வாழ்க உன் மங்கலக் குங்குமம் வாழ்க
வாழ்க...வாழ்க...

(எங்கிருந்தாலும்)

இங்கே ஒருவன் காத்திருந்தாலும்
இளமை அழகைப் பார்த்திருந்தாலும்
சென்ற நாளை நினத்திருந்தாலும்
திருமகளே நீ வாழ்க
வாழ்க...வாழ்க...

(எங்கிருந்தாலும்)

வருவாய் என நான் தனிமையில் நின்றேன்
வந்தது வந்தாய் துணையுடன் வந்தாய்
துணைவரைக் காக்கும் கடமையும் தந்தாய்
தூயவளே நீ வாழ்க
வாழ்க...வாழ்க...

(எங்கிருந்தாலும்)

ஏற்றிய தீபம் நிலை பெற வேண்டும்
இருண்ட வீட்டில் ஒளி தர வேண்டும்
போற்றும் கணவன் உயிர் பெற வேண்டும்
பொன்மகளே நீ வாழ்க
வாழ்க...வாழ்க

Tuesday, January 4, 2011

சமீபத்தில் நெஞ்சை உருக்கிய பாடல்

ஒரு விலைமகள் தான் எப்படி இந்த நிலைக்கு வந்தேன் என்பததை கூறும் படியாக அமைந்திருந்தது இந்த பாடல்.


வந்தனமாம் வந்தனமாம்
எல்லோருக்கும் வந்தனம்
மனமணமாம் சந்தனம்
சந்தனத்த பூசிகிட்டு சந்தோசமா கேக்கணும்
கலகலப்பா ஆடணும்,
கையல தாளம் போடணும்
விசுலு ராகம் பாடனும்

ஜில்லா விடு ஜில்லா வந்த
கதைய நீயும் கேளையா
தூத்துக்குடி பொண்ணையா
நான் தூத்துக்குடி பொண்ணையா
என் கதைய கேளையா

சுகத்த விக்குற பொண்ணுக்கும்
மனசிருக்குது பரையா

அஞ்சு பொண்ண பெத்தெடுத்த
அரசன் கூட ஆண்டியாம்
வாழ்க்கையில போண்டியாம்..

எட்டாவதா என்னை பெத்த
எங்கப்பனுக்கு தெரியல
சொக்கனும் அத சொல்லல..

வளைந்து நிக்குற தென்னையா
வக்கணையா நானின்னேன்

ஏழையும் கரை சேத்ததாலே
ஏழரையா நானானேன்.

அங்கெ சுத்தி இங்கே சுத்தி
வந்தானையா மாப்பிள
சீக்காளிக்கு மறுபுள்ள
பழைய பாயா என்ன சுத்தி
போனானையா மாப்பிள
அவன் துப்பில்லாத ஆம்பிள

அஞ்சாந்நாளு மூட்டு வலியில
மாப்பிள தான் படுத்திட்டான்
என் கனவையெல்லாம் ஒடச்சிட்டான்

காச்சலுக்கு காடு வித்தேன்
இருமலுக்கு நிலம் வித்தேன்
வித்ததேல்லாம் போக மிச்சமாக
நான் நானின்னேன்
அட எச்சமாக நானின்னேன்

ஊரிலுள்ள மீசையெல்லாம்
என்ன சுத்தி வந்திச்சு
இள மனச கெடுத்திச்சு

உசிர விட மானம் பெருசு
புத்திக்கு தான் தெரிஞ்சிச்சு.
வயிறு எங்கே கேட்டிச்சு

ஒரு சாணு வயித்துக்கு தான்
எல்லாத்தையும் விக்குறேன்
நான் எல்லாத்தையும் விக்குறேன்

இப்ப இங்கே நிக்குறேன்
என் கதைய முடிக்கிறேன்