
விடைகளைத் தேடி,
தடுமாறும்
கேள்விகள்
நாங்கள்!
வந்தாரை வாழவைத்து
எங்கள்
தன்மானத்தை இழந்தவர்கள்
நாங்கள்!
எங்கள் தாய்மொழியை
மறந்து, ஆங்கில
மோகத்தில் அலைபவர்கள்
நாங்கள்!
எங்கள் இனம்
அழிய, மகிழ்ச்சியாக
தொலைக்காட்ச்சியில்
எங்களை தொலைத்தவர்கள்,
நாங்கள் தான் திராவிடர்கள்
தமிழர்கள்!!
ஆனால் இது நீடிக்காது...
என்பதே எங்கள் எச்சரிக்கை.